Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உரிமையாளரிடம் இருந்து தப்பிச் சென்ற மலைப்பாம்பு உயிரிழந்தது

உரிமையாளரிடம் இருந்து தப்பிச் சென்ற மலைப்பாம்பு உயிரிழந்தது

By: Nagaraj Thu, 10 Sept 2020 7:45:33 PM

உரிமையாளரிடம் இருந்து தப்பிச் சென்ற மலைப்பாம்பு உயிரிழந்தது

தப்பி சென்ற மலைப்பாம்பு உயிரிழந்தது... கனடாவில் ஒருவர் செல்லப்பிராணியாக மலைப்பாம்பு ஒன்றை வளர்த்து வந்த நிலையில், அதை வீட்டில் அடைத்து வளர்ப்பது அந்த பாம்புக்கு பிடிக்கவில்லையோ என்னவோ, அதன் உரிமையாளர் தூங்கும்போது நைசாக தப்பிவிட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி அது விக்டோரியாவில் கார் ஒன்றிற்கு கீழே இருப்பது தெரியவரவே, அதை அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்து விட்டார்கள்.

python,meadow,owner,escaped,died ,மலைப்பாம்பு, புல்வெளி, உரிமையாளர், தப்பியது, இறந்தது

மீண்டும் ஆகஸ்ட் 19ஆம் திகதி, மீண்டும் சுதந்திரத்தை நோக்கி பயணத்தை துவங்கியுள்ளது அந்த பாம்பு.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் அந்த பாம்பு ஒரு வீட்டின் புல்வெளியில் கண்டெடுக்கப்பட்டது. ஆனால், இம்முறை அது உயிருடன் இல்லை.
1.5 மீட்டர் நீளமுள்ள அந்த மலைப்பாம்பின் உடலைப் பார்த்து, அது தனது பாம்புதான் என உறுதி செய்தார் அதன் உரிமையாளர். தான் ஆசைப்பட்டபடியே கூண்டிலிருந்து மட்டுமல்ல, உலக வாழ்க்கையிலிருந்தே விடுபட்டுவிட்டது அந்த பாம்பு.

Tags :
|
|
|