Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனாவை வெல்ல உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் - ஆன்டனியோ குட்டரெஸ்

கொரோனாவை வெல்ல உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் - ஆன்டனியோ குட்டரெஸ்

By: Karunakaran Fri, 18 Sept 2020 1:33:19 PM

கொரோனாவை வெல்ல உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் - ஆன்டனியோ குட்டரெஸ்

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக 3 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 9 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

இங்கிலாந்து, அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகள் கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் முன்னணியில் உள்ளன. கொரோனா தொற்று உலகம் முழுவதும் தொடர்ந்து பரவி வரும் நிலையில், இது நம்பர் ஒன் உலகளாவிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருப்பதாக ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் கூறியுள்ளார்.

nations,world,coronavirus,antonio guterres ,நாடுகள், உலகம், கொரோனா வைரஸ், அன்டோனியோ குடரெஸ்

இதுகுறித்து ஆன்டனியோ குட்டரெஸ் கூறுகையில், கொரோனாவை வெல்வதற்கு சர்வதேச சமூகம் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது. பலர் தங்கள் நம்பிக்கையை ஒரு தடுப்பூசி மீது வைத்திருக்கிறார்கள். ஆனால் தெளிவாக இருக்கட்டும், ஒரு தொற்றுநோய்க்கான சஞ்சீவி எங்கும் இல்லை. இந்த நெருக்கடியை ஒரு தடுப்பூசி மட்டும் போக்காது. மேலும் புதிய தொற்றுகளை கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்புகளை நாடுகள் பெருமளவில் விரிவுபடுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கும், உயிர்களை காக்கவும் குறிப்பாக அடுத்த 12 மாதங்களுக்குள்ளாக முக்கிய சிகிச்சையை ஒன்றிணைந்து வழங்க வேண்டும். கொரோனா பெருந்தொற்று நமது வாழ்நாளில் கண்டிராத ஒரு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே இந்த ஆண்டு ஐ.நா. பொதுச்சபை கூட்டம் வழக்கமான முறையில் இருக்காது என்று தெரிவித்துள்ளார்.

Tags :
|