சென்னையில் கொரோனா பாதித்த காவல்துறையினர் எண்ணிக்கை 100 ஐ கடந்தது
By: Nagaraj Tue, 12 May 2020 2:53:15 PM
100 ஐ தாண்டியது பாதிப்பு... சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட காவல்துறையினரின் எண்ணிக்கை 100 ஐத் தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 100 யைத் தாண்டியுள்ளது. இதில் காவல்துறை உயர் அதிகாரிகளும் அடங்குவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னையில் 2 துணை ஆணையர்கள், ஒரு உதவி ஆணையர் மற்றும் கூடுதல் காவல் ஆணையருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags :
police |
corona |