கனடாவில் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது
By: Nagaraj Tue, 29 Dec 2020 1:35:33 PM
கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், இதுவரை மொத்தமாக 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, வைரஸ் தொற்றினால் 15ஆயிரத்து 121பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் வைரஸ் தொற்றினால், மூவாயிரத்து 187பேர் பாதிக்கப்பட்டதோடு 158பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 26ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், ஐந்து இலட்சத்து 55ஆயிரத்து 207பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 74ஆயிரத்து 113பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 711பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், நான்கு இலட்சத்து 65ஆயிரத்து 973பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.