ஈராக்கில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்தது
By: Nagaraj Tue, 29 Sept 2020 5:45:57 PM
ஈராக்கில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒன்பதாயிரத்தை கடந்தது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஒன்பதாயிரத்து 52பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 16ஆவது நாடாக விளங்கும் ஈராக்கில், இதுவரை மூன்று இலட்சத்து 53ஆயிரத்து 566பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஈராக்கில் நான்காயிரத்து 116பேர்
பாதிக்கப்பட்டுள்ளனர். 62பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை 59 ஆயிரத்து
730 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 532பேரின்
நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை இரண்டு இலட்சத்து 84ஆயிரத்து 784பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.