சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 971 ஆக உயர்வு
By: Monisha Wed, 01 July 2020 5:20:15 PM
சேலம் மாவட்டத்தில் ஏற்கனவே 780 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 191 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த மாதம் முதல் கொரோனா வைரஸ் பரவல் தீவிரம் அடைந்து வருகிறது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 90 ஆயிரத்து 167 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 38 ஆயிரத்து 889 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மாநிலம் முழுவதும் மீண்டோரின் மொத்த எண்ணிக்கை 50 ஆயிரத்து 74 அதிகரித்துள்ளது. ஆனாலும், தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,201 ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 58,327 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் ஏற்கனவே 780 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று ஒரேநாளில் 191 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 971 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 284 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 3 பேர் உயிரிழந்துள்ளனர்.