Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வெப்பச்சலனத்தால் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும் வாய்ப்பு

வெப்பச்சலனத்தால் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும் வாய்ப்பு

By: Nagaraj Sat, 27 June 2020 6:39:04 PM

வெப்பச்சலனத்தால் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும் வாய்ப்பு

வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதியில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:

வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதியில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யலாம். மேலும் சென்னை உள்பட 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

moderate rain,convection,17 counties,3 days ,மிதமான மழை, வெப்பச்சலனம், 17 மாவட்டங்கள், 3 நாட்கள்

அதன்படி, அடுத்த 24 மணி நேரத்திற்கு விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், காஞ்சிபுரம், புதுவை , காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கரூர், திண்டுக்கல், தேனி, கோவை, நீலகிரி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும்.

நாளை மற்றும் நாளை மறுநாள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் ,கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி,கோவை, நீலகிரி, நாமக்கல், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம் காரைக்கால் தஞ்சாவூர் திருவாரூர் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :