விவசாயிகள் போராட்டம் குறித்த கனடா பிரதமர் கருத்து தேவையற்றது
By: Nagaraj Tue, 01 Dec 2020 8:48:32 PM
கருத்து தேவையற்றது...டில்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு கனடா பிரதமர் ஆதரவு தெரிவித்த நிலையில் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் அவரது கருத்து தேவையற்றது என இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து பல்வேறு விவசாய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த 6 நாள்களாக தில்லியில் போராடி வருகின்றனர். இது உலக அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் காணொலி வாயிலாக குருநானக் ஜெயந்தி வாழ்த்துகளைப் பகிர்ந்து
கொண்ட கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ டில்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள்
போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.
இந்நிலையில் மத்திய
வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவட்சா," டில்லி
விவசாயிகள் போராட்டம் தொடர்பாக கனடா பிரதமர் தெரிவித்த தவறான
கருத்துக்களைக் கண்டோம். ஒரு ஜனநாயக நாட்டின் உள்விவகாரங்களில் இவ்வித
கருத்துகள் தேவையற்றது" எனத் தெரிவித்தார்.