Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பெற்றோரை பார்க்க சென்னையிலிருந்து சைக்கிளிலேயே கொடைக்கானல் சென்ற மகன்

பெற்றோரை பார்க்க சென்னையிலிருந்து சைக்கிளிலேயே கொடைக்கானல் சென்ற மகன்

By: Nagaraj Sun, 16 Aug 2020 4:35:17 PM

பெற்றோரை பார்க்க சென்னையிலிருந்து சைக்கிளிலேயே கொடைக்கானல் சென்ற மகன்

இ-பாஸ் கிடைக்கவில்லை. பெற்றோரை பார்க்க வேண்டும். இதனால் தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் சென்னையிலிருந்து கொடைக்கானலுக்கு சைக்கிளில் பயணம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருபவர் வெங்கடேஷ். கொரோனா ஊரடங்கால் நான்கு மாதங்களாக பெற்றோரை பார்க்க முடியாத நிலையில் இருந்து வந்தார். இதையடுத்து அவர் பெற்றோரை பார்ப்பதற்காக இ-பாஸ்க்கு விண்ணப்பித்துள்ளார். ஆனால் அவருக்கு இ0பாஸ் கிடைக்காததை அடுத்து சென்னையில் இருந்து சைக்கிளிலேயே கொடைக்கானல் செல்ல முடிவு செய்தார்.

இதனை அடுத்து அவர் கடந்த புதன்கிழமை சென்னையில் இருந்து கிளம்பி நான்கு நாட்கள் சைக்கிளில் பயணம் செய்து கொடைக்கானல் சென்றடைந்தார். அதன்பின் தனது பெற்றோரை சந்தித்து உள்ளார்.

chennai,kodaikanal,4 days,parents,e-pass ,சென்னை, கொடைக்கானல், 4 நாட்கள், பெற்றோர், இ-பாஸ்

இந்த நிலையில் வெங்கடேஷ் சென்னையில் இருந்து கொடைக்கானல் சென்றதை கேள்விப்பட்ட அதிகாரிகள் கொடைக்கானலில் இருந்து வெங்கடேஷ் அவரது பெற்றோர்களுடன் சென்னை செல்வதற்கு இ-பாஸ் கொடுத்துள்ளனர். இதனால் அவர் மகிழ்ச்சி அடைந்துள்ளார். அவர் விரைவில் தனது பெற்றோரை அழைத்து கொண்டு சென்னை திரும்ப உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெற்றோரை பார்ப்பதற்காக சென்னையில் இருந்து சைக்கிளில் நான்கு நாட்கள் பயணம் செய்த வாலிபருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

Tags :
|