Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாராளுமன்றத்தில் மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது; மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல்

பாராளுமன்றத்தில் மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது; மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல்

By: Monisha Mon, 14 Sept 2020 10:28:06 AM

பாராளுமன்றத்தில் மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது; மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல்

பாராளுமன்றத்தில் பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு மத்தியில் மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. காலை 9 மணிக்கு சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் மக்களவை கூடியது. அப்போது பிரதமர் மோடி மற்றும் எம்பிக்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து பங்கேற்றனர். முதல் நாளான இன்று மக்களவை கூட்டம் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், நாளை முதல் அக்டோபர் 1-ந் தேதி வரை பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் நடைபெறும்.

மாநிலங்களவை கூட்டம் முதல் நாளான இன்று பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரையிலும், மற்ற நாட்களில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் நடைபெறுகிறது. கொரோனா சூழல் காரணமாக, முதல்முறையாக, மக்களவையும், மாநிலங்களவையும் இரு வெவ்வேறு ஷிப்ட்களில் நடக்கிறது. கூட்டம் நடத்துவதற்காக இருசபைகளும் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளன. கொரோனா கால கட்டுப்பாடுகளை பின்பற்றி சமூக இடைவெளியுடன் இருக்கைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

5 மாதங்களுக்கு பிறகு தொடங்கி உள்ள இந்த பாராளுமன்ற கூட்டத்தொடர் அக்டோபர் 1-ந் தேதி வரை நடத்தப்பட உள்ளது. மொத்தம் 18 நாட்கள் கூட்டம் நடைபெறும்.

parliament,monsoon session,lok sabha,politics,states ,பாராளுமன்றம்,மழைக்கால கூட்டத் தொடர்,மக்களவை,அரசியல்,மாநிலங்களவை

இந்த கூட்டத்தில் நிதி தொடர்பான விவகாரங்கள் உள்பட 47 மசோதாக்களை விவாதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கொரோனா பிரச்சினை, லடாக் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை கிளப்பி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

கூட்டம் தொடங்கியதும் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. சமீபத்தில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் வசந்தகுமார் எம்பி ஆகியோருக்கு அஞ்சலி தெரிவிக்கப்பட்டது.

மேலும் இந்த ஆண்டில் மறைந்த பண்டிட் ஜஸ்ராஜ், சத்தீஷ்கர் முன்னாள் எம்பி அஜித் ஜோகி, மத்திய பிரதேச கவர்னர் லால்ஜி டாண்டன், உ.பி. மந்திரிகள் கமால் ராணி, சேட்டன் சவுகான், முன்னாள் மத்திய மந்திரிகள் ரகுவன்ஷ் பிரசாத் சிங் உள்ளிட்டோருக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. உறுப்பினர்கள் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர். பின்னர் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. இதனையடுத்து மக்களவை ஒரு மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது.

Tags :