Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குடும்பக் கட்டுப்பாடு செய்த பெண்ணுக்கு மீண்டும் குழந்தை பிறந்தது

குடும்பக் கட்டுப்பாடு செய்த பெண்ணுக்கு மீண்டும் குழந்தை பிறந்தது

By: Nagaraj Thu, 26 Nov 2020 9:00:32 PM

குடும்பக் கட்டுப்பாடு செய்த பெண்ணுக்கு மீண்டும் குழந்தை பிறந்தது

குடும்ப கட்டுப்பாடு செய்த பெண்ணுக்கு மீண்டும் குழந்தை... குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை செய்து கொண்ட பெண்ணுக்கு மீண்டும் குழந்தை பிறந்துள்ளது பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் தார்வார் மாவட்டத்தில் உள்ள ஷம்சி பகுதியைச் சேர்ந்த சந்திரப்பா காவேரி - ஷோபா (43) தம்பதிக்கு 19 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அதைதொடர்ந்து ஷோபா-வுக்கு பெண் குழந்தை பிறந்தது. பின்னர் ஷோபா, மருத்துமனையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். ஒரே ஒரு பெண் குழந்தை மட்டுமே பிறந்தது. ஆனால், 18 வயதில் கடந்த ஆண்டு அந்த பெண் இறந்து விட்டார்.

karnataka,family planning,girl child,happiness,counseling ,கர்நாடகா, குடும்பக்கட்டுப்பாடு, பெண் குழந்தை, மகிழ்ச்சி, ஆலோசனை

இதனால் சந்திரப்பா - ஷோபா தம்பதி, தங்களுக்கு மீண்டும் ஒரு குழந்தை வேண்டி மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்டார். அதன்பேரில், மாற்று அறுவை சிகிச்சை-க்கு பின்னர், ஷோபா மீண்டும் கர்ப்பமானார்.

இந்த நிலையில், ஷோபா-வுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால், சந்திரப்பா, ஷோபா மற்றும் அவரது குடும்பத்தினர் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags :