Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காங்கிரஸ் கட்சிக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை- முதலமைச்சர் நாராயணசாமி

காங்கிரஸ் கட்சிக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை- முதலமைச்சர் நாராயணசாமி

By: Monisha Fri, 18 Dec 2020 10:43:50 AM

காங்கிரஸ் கட்சிக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை- முதலமைச்சர் நாராயணசாமி

பெங்களூருவில் முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம், காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் ஆகியோரை புதுவை மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரான தினேஷ் குண்டுராவ் அழைத்துப் பேசினார். அப்போது கருத்து வேறுபாடுகளை மறந்து தேர்தல் பணிகளில் ஈடுபடுமாறு அறிவுறுத்தினார்.

இந்நிலையில் இது குறித்து முதலமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- புதுவையில் காங்கிரஸ் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் தொடர்ந்து கட்சிப்பணி ஆற்றி வருகிறார்கள். தொகுதி வாரியாக கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. மத்திய அரசுக்கு எதிராக இளைஞர், மாணவர் காங்கிரசார் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

election,congress,opinion,meetings,conflict ,தேர்தல்,காங்கிரஸ்,கருத்து,கூட்டங்கள்,முரண்பாடு

காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரான தினேஷ் குண்டுராவ் எங்களிடம் தேர்தல் ஆயத்த பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அதற்கேற்ப பணிகளை செய்து வருகிறோம். எங்களிடையே எந்தவித கருத்து வேறுபாடு, முரண்பாடுகள் இல்லை.

சிலர் வேண்டுமென்றே குழப்பங்களை விளைவிக்க சதி வேலை செய்து வருகிறார்கள். மக்கள் மத்தியில் யாரும் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என அவர் கூறினார். பேட்டியின்போது அமைச்சர் நமச்சிவாயம், முதலமைச்சரின் நாடாளுமன்ற செயலாளர் மற்றும் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. ஆகியோர் உடனிருந்தனர்.

Tags :