Advertisement

அமெரிக்க அமைச்சர்களை தனிமைப்படுத்தும் அவசியமில்லை

By: Nagaraj Tue, 27 Oct 2020 9:52:58 PM

அமெரிக்க அமைச்சர்களை தனிமைப்படுத்தும் அவசியமில்லை

தனிமைப்படுத்தும் அவசியமில்லை... தற்போது அமெரிக்காவில் இருந்து வரும் ராஜாங்க அமைச்சர்களை இலங்கையில் 14 நாட்கள் தனிமைப்படுத்தும் அவசியமில்லை என தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் பணிப்பாளர் விசேட மருத்துவ நிபுணர் சுதத் சமரவீர கூறியிருக்கிறார்.

அமெரிக்காவில் மிக வேகமாக கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், அங்கிருந்து இலங்கை வரும் ராஜாங்க அமைச்சர்களை தனிமைப்படுத்தும் செயல்பாடுகள் முன் எடுக்கப்படுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

isolation,not required,us ministers,sri lanka ,தனிமைப்படுத்தல், தேவையில்லை, அமெரிக்க அமைச்சர்கள், இலங்கை

அப்போது ’24 மணி நேரத்திற்குள் ஒரு சிலரை சந்திக்கவே அவர்கள் வருகின்றனர் என்பதால், அவர்களை தனிமைப்படுத்தும் அவசியமில்லை. இவர்கள் தமது நாட்டில் இருந்து புறப்படும் முன்னர் பிசிஆர் பரிசோதனை செய்துக்கொண்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :