Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மதுவுக்கு சைடிஷ்ஷாக பாம்பை கொன்று சமைத்து தின்ற 3 பேர் கைது

மதுவுக்கு சைடிஷ்ஷாக பாம்பை கொன்று சமைத்து தின்ற 3 பேர் கைது

By: Nagaraj Sat, 19 Sept 2020 5:39:09 PM

மதுவுக்கு சைடிஷ்ஷாக பாம்பை கொன்று சமைத்து தின்ற 3 பேர் கைது

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே தங்காபுரி பட்டிணம் வட பத்ர காளியம்மன் கோவில் பகுதியில் 3 இளைஞர்கள் சேர்ந்து 6 அடி நீளமுள்ள பாம்பை மீன் வெட்டுவதை போல் வெட்டி சமையல் செய்து சாப்பிட்டனர். இப்போது அவர்கள் சிறையில் கம்பி எண்ணுகின்றனர்.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. பலியானவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் பாம்பு, எறும்புத்திண்ணி, வௌவ்வால்கள் வழியாக மனிதர்களுக்கு பரவியிருக்கலாம் என்கிற சந்தேகமும் இருக்கிறது.

இதனால், சீனாவிலேயே பாம்புக்கறி சாப்பிடுவதை மக்கள் தவிர்த்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாட்டில் வீட்டுக்குள் நுழைந்த பாம்பை துண்டு துண்டாக நறுக்கி மீன் போல பொரித்த சாப்பிட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

snake curry,drinking alcohol,3 arrested,salem ,பாம்பு கறி, மது குடிக்க, 3 பேர் கைது, சேலம்

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே தங்காபுரி பட்டிணம் வட பத்ர காளியம்மன் கோவில் பகுதியில் 3 இளைஞர்கள் சேர்ந்து 6 அடி நீளமுள்ள பாம்பை மீன் வெட்டுவதை போல் வெட்டி சமையல் செய்து சாப்பிட்டனர். பாம்பை சமையல் செய்யும் காட்சியை மொபைல் போனில் படமாக எடுத்து தனது நண்பர்களுக்கும் அனுப்பி உள்ளனர்.

இந்த வீடியோ மேட்டூர் பகுதியில் வைரலாக பரவியது. இதைத் தொடர்ந்து பாம்பை சமைத்து சாப்பிட்டதாக சுரேஷ்முகமது உசேன், ஜெயா ஆகியோரை வனத்துறையினர் பிடித்தனர். விசாரணையில், நேற்று முன்தினம் அங்குள்ள சிவக்குமார் என்பவரது வீட்டினுள் சாரைப்பாம்பு புகுந்துள்ளது.

அதனை சுரேஷ் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து பிடித்துள்ளனர். பின்னர், பாம்பை கொன்று, தோலை உறித்து மீனை போல் துண்டு துண்டாக வெட்டி மசாலா தடவி எண்ணெய்யில் போட்டு வறுத்து எடுத்துள்ளனர். பிறகு மது குடிக்க, சைடிஷ்சாக சாப்பிட்டுள்ளனர் என்பது தெரியவந்தது.

சுரேஷ் உள்ளிட்டவர்கள் மீது, வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags :