Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • செப்டம்பர் 15-க்குள் விற்பனை செய்யவில்லை என்றால் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்படும் - டிரம்ப்

செப்டம்பர் 15-க்குள் விற்பனை செய்யவில்லை என்றால் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்படும் - டிரம்ப்

By: Karunakaran Tue, 04 Aug 2020 10:36:10 AM

செப்டம்பர் 15-க்குள் விற்பனை செய்யவில்லை என்றால் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்படும் - டிரம்ப்

தென்சீன கடல் விவகாரம், வர்த்தகப்போர் என அமெரிக்க0சீன இடையே ஏற்கனவே மோதல் இருந்தது. அதன்பின், கொரோனா வைரஸ் விவகாரம் அமெரிக்க-சீன இடையே மோதல் போக்கை மேலும் வலுத்தது. கொரோனா வைரஸ் தொடர்பாக இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் குற்றச்சாட்டி வந்ததால் மோதல் மேலும் அதிகரித்தது.

கொரோனா தடுப்பூசி தகவல்களை திருட முயற்சிப்பதாக சீனா மீது அமெரிக்கா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தியது. மேலும், அமெரிக்காவின் ஹூஸ்டனில் உள்ள சீன தூதரகத்தை மூட உத்தரவிட்டது. சில நாட்களில் பதிலடி நடவடிக்கையாக வுகான் நகரில் அமெரிக்க தூதரகத்தை சீனா மூடியது.

tiktok,ban,america,trump ,டிக்டாக்,அமெரிக்கா, தடை, டிரம்ப்

தற்போது இந்தியா மேற்கொண்ட நடவடிக்கை போன்றே சீனாவின் டிக்டாக் செயலியை தங்கள் நாட்டிலும் தடை விதிக்க அமெரிக்கா தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. டிரம்ப் தடை விதிக்கும் முன்னரே டிக்டாக் செயலியின் அமெரிக்க செயல்பாட்டு உரிமத்தை விற்பனை செய்யும் முயற்சியில் டிக்டாக்கின் தாய்நிறுவனமான பைட் டான்ஸ் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில், டிக்டாக் செயலியை சீனா தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது பாதுகாப்பு காரணங்களுக்காக மிகவும் ஆபத்தான ஒன்று. டிக்டாக் செயலியின் அமெரிக்க உரிமத்தை மைக்ரோசாப்ட் நிறுவனமோ அல்லது வேறு ஏதேனும் அமெரிக்க பெருநிறுவனமோ வாங்குவதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அமெரிக்க நிறுவனங்கள் யாரும் டிக்டாக் செயலியை வாங்கவில்லை என்றால் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் அந்த செயலி அமெரிக்காவில் செயல்பட தடை விதிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

Tags :
|
|