Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கட்டுப்பாட்டை இழந்த டிரெய்லர் லாரி வீட்டிற்குள் புகுந்து விபத்து; டிரைவர் பலி

கட்டுப்பாட்டை இழந்த டிரெய்லர் லாரி வீட்டிற்குள் புகுந்து விபத்து; டிரைவர் பலி

By: Monisha Mon, 06 July 2020 5:19:34 PM

கட்டுப்பாட்டை இழந்த டிரெய்லர் லாரி வீட்டிற்குள் புகுந்து விபத்து; டிரைவர் பலி

ஆம்பூர் அருகே ரெய்லர் லாரி தறிகெட்டு ஓடி சாலையோரம் இருந்த வீட்டிற்குள் புகுந்து ஏற்பட்ட விபத்தில் 6 பேர் காயம் அடைந்தனர். டிரைவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

டிரெய்லர் லாரி ஒன்று கிருஷ்ணகிரியில் இருந்து வேலூர் நோக்கி சென்றது. டிரெய்லர் லாரியை வேலூர் விருதம்பட்டை சேர்ந்த துரைராஜ் (வயது 60) என்பவர் ஓட்டினார். அவருடன் வேலூரை சேர்ந்த மற்றொரு டிரைவர் வெங்கடேசன் (45) உடன் சென்றார். இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே உள்ள சின்னகொம்மேஸ்வரம் பகுதி அருகே சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டிரெய்லர் லாரி தறிகெட்டு ஓடி சாலையோரம் இருந்த வீட்டிற்குள் புகுந்தது.

trailer lorry,accident,kills,injury ,டிரெய்லர் லாரி,விபத்து,பலி,காயம்

இந்தவிபத்தில் டிரைவர் துரைராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் டிரைவர் வெங்கடேசன், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அஸ்மிதா (13), யுகேஷ் (12), சஞ்சய் (6) உள்பட 6 பேர் காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆம்பூர் தாலுக்கா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்த 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் லாரியின் முன்பக்கத்தில் சிக்கியிருந்த லாரி டிரைவரின் உடலை நீண்ட நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
|