கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டதால் 4 கிராமங்களுக்கு பயணக்கட்டுப்பாடு
By: Nagaraj Sun, 18 Oct 2020 6:24:01 PM
4 கிராமங்களுக்கு பயணக்கட்டுப்பாடு... குருநாகல்- குளியாப்பிட்டியில் 11 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் நான்கு கிராமங்களுக்கு பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கயியால, ஊருபிடிய, என்னருவ மற்றும் பல்லேவல ஆகிய நான்கு கிராமங்களுக்கே இவ்வாறு பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. குளியாப்பிட்டியில் அமைந்துள்ள தேவஸ்தானம் ஒன்றில் கடந்த 2ஆம் திகதி திருமண நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து, மணமகனுக்கு கடந்த 12ஆம் திகதி வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து குறித்த திருமண நிகழ்வில் பங்கேற்ற மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
தொடர்ந்து அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்
பரிசோதனையில் 11 பேருக்கு நேற்று தொற்று உறுதிப்படுத்தப்பட்டமை
குறிப்பிடத்தக்கது. மேலும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இரண்டு
நோயாளிகள் அறைகளுக்குள் நோயாளிகளை இணைத்துக்கொள்வது தற்காலிகமாக
நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 34 மற்றும்
36ஆம் இலக்க அறைகளே இவ்வாறு மூடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கொரோனா
வைரஸ் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டுள்ளது.