Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 2024-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தான் மீண்டும் போட்டியிட போவதாக டிரம்ப் சூசகமாக தகவல்

2024-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தான் மீண்டும் போட்டியிட போவதாக டிரம்ப் சூசகமாக தகவல்

By: Karunakaran Thu, 03 Dec 2020 09:08:40 AM

2024-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தான் மீண்டும் போட்டியிட போவதாக டிரம்ப் சூசகமாக தகவல்

அமெரிக்காவில் கடந்த 3-ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடந்து முடிந்தது. இதில் குடியரசு கட்சியின் சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் 2-வது முறையாக போட்டியிட அவரை எதிர்த்து ஜனநாயக கட்சியின் சார்பில் ஜோ பைடன் போட்டியிட்டார். முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிக எண்ணிக்கையிலான தபால் வாக்குகள் இந்த தேர்தலில் பதிவானதால் வாக்கு எண்ணிக்கை 4 நாட்களாக நீடித்தது. இதில் இரு வேட்பாளர்களுக்கும் இடையே இழுபறி நீடித்தது.

இருப்பினும் ஆரம்பத்திலிருந்தே முன்னிலையில் இருந்து வந்த ஜோ பைடன் ஆட்சி அமைப்பதற்கு தேவையான வாக்குகளை விட அதிகமான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அவர் அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக அடுத்த ஆண்டு ஜனவரி 20-ந்தேதி பதவியேற்கிறார். ஆனால் டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் தொடர்ந்து பிடிவாதமாக இருந்து வருகிறார்.

trump,2024,presidential election,america ,டிரம்ப், 2024, ஜனாதிபதித் தேர்தல், அமெரிக்கா

மேலும் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டும் டிரம்ப், ஜோ பைடனின் வெற்றியை எதிர்த்து சட்ட போராட்டம் நடத்தி வருகிறார். ஆனாலும் இந்த சட்ட போராட்டத்தில் அவர் தொடர்ந்து பின்னடைவையே சந்தித்து வருகிறார். இதனால் டிரம்ப் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவது உறுதியாகிவிட்டது. இந்நிலையில் ஜனாதிபதி டிரம்ப் நேற்று வெள்ளை மாளிகையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை தொடங்கி வைத்தார்.

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்ட தொடக்க விழாவில் டிரம்பின் குடியரசு கட்சி உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய டிரம்ப், இந்த 4 ஆண்டுகள் ஆச்சரியமானவையாக இருந்தது. நாங்கள் இன்னும் 4 ஆண்டுகளுக்கு இருக்க முயற்சி செய்கிறோம். இது இல்லையெனில் அதற்கு அடுத்த 4 ஆண்டுகளில் நான் உங்களை பார்ப்பேன் எனக் கூறினார். 2024-ம் ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் தான் மீண்டும் போட்டியிட போவதை டிரம்ப் சூசகமாக தெரிவித்தார்.


Tags :
|
|