Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ட்ரம்ப் கையெழுத்திட மறுப்பது பேரழிவுகளை ஏற்படுத்தும்; ஜோ பைடன் கண்டனம்

ட்ரம்ப் கையெழுத்திட மறுப்பது பேரழிவுகளை ஏற்படுத்தும்; ஜோ பைடன் கண்டனம்

By: Nagaraj Sun, 27 Dec 2020 8:47:20 PM

ட்ரம்ப் கையெழுத்திட மறுப்பது பேரழிவுகளை ஏற்படுத்தும்; ஜோ பைடன் கண்டனம்

ஜோபைடன் கண்டனம்... கொரோனா நிவாரண சட்டமூலத்தில் ட்ரம்ப் கையெழுத்திட மறுப்பது பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் என ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா நிவாரணத்துக்காக 900 பில்லியன் அமெரிக்க டொலரை ஒதுக்கீடு செய்ய அந்நாட்டு நாடாளுமன்றம் அண்மையில் ஒப்புதல் வழங்கியிருந்தது. இதையடுத்து, இது தொடர்பான கொரோனா நிவாரண சட்டமூலம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. குறித்த சட்டமூலம் டொனால்ட் ட்ரம்ப் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளது.

சட்டமூலத்தில் ட்ரம்ப் கையெழுத்திட்டால் தான் அது சட்டமாக்கப்பட்டு, கொரோனா நிவாரணத்துக்கான நிதி ஒதுக்கப்படும். ஆனால், இந்த சட்டமூலத்தில் அமெரிக்கர்களுக்கு குறைவான உதவியே கிடைக்கிப்பதாகவும், வெளிநாடுகளே அதிக பலனடைவதாகவும் கூறி சட்டமூலத்திற்கு ஒப்புதல் அளிக்க ட்ரம்ப் மறுத்து வருகிறார்.

warning,joe biden,americans,insurance benefits ,எச்சரிக்கை, ஜோ பைடன், அமெரிக்கர்கள், காப்பீடு பலன்கள்

மேலும், கொரோனா நிவாரணமாக அமெரிக்கர்களுக்கு தலா 600 டொலர் வழங்கப்படும் என சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதை 2 ஆயிரம் டொலராக அதிகரிக்கும்படியும் ட்ரம்ப் அமெரிக்க நாடாளுமன்றத்திடம் வலியுறுத்தியுள்ளார். இதனால், கொரோனா நிவாரண சட்டமூலம் சட்டமாவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், கொரோனா நிவாரண சட்டமூலத்தில் ட்ரம்ப் கையெழுத்திட மறுப்பதற்கு ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார். சட்டமூலத்தில் ட்ரம்ப் கையெழுத்திடாமல் காலம் தாழ்த்துவது பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும். இதன் மூலம் 1 கோடி அமெரிக்கர்கள் வேலையின்மை காப்பீடு பலன்களை இழக்க நேரிடும் எனவும் பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags :