Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • லடாக் பகுதிகள் சீனாவில் உள்ளதாக காட்டப்பட்ட விவகாரத்தில் டுவிட்டர் நிறுவனம் மன்னிப்பு

லடாக் பகுதிகள் சீனாவில் உள்ளதாக காட்டப்பட்ட விவகாரத்தில் டுவிட்டர் நிறுவனம் மன்னிப்பு

By: Karunakaran Thu, 29 Oct 2020 8:01:52 PM

லடாக் பகுதிகள் சீனாவில் உள்ளதாக காட்டப்பட்ட விவகாரத்தில் டுவிட்டர் நிறுவனம் மன்னிப்பு

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கின் லே பகுதிகள் சீனாவின் ஒரு பகுதியாக டுவிட்டர் நிறுவனம் வெளியிட்டிருந்த இருப்பிட அமைப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் இதுகுறித்து டுவிட்டர் நிறுவனம் விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டது. இந்நிலையில், டுவிட்டர் பிரதிநிதிகள் குழு ஒன்று பாராளுமன்ற கூட்டுக்குழு முன் நேற்று ஆஜராகியது.

ஜம்மு காஷ்மீர், லடாக் சர்ச்சை தொடர்பான இருப்பிட அமைப்பை சீனாவில் உள்ளதாக காட்டியது குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, இந்த விவகாரத்தில் டுவிட்டர் நிறுவனம் அளித்த விளக்கம் போதுமானதல்ல என பாராளுமன்ற கூட்டுக்குழு உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக கண்டனம் தெரிவித்தனர். அப்போது, இந்தியாவின் உணர்வுகளுக்கு டுவிட்டர் நிறுவனம் மதிப்பளிப்பதாக டுவிட்டர் பிரதிநிதிகள் கூறினர்.

twitter,apology,ladakh areas,china ,ட்விட்டர், மன்னிப்பு, லடாக் பகுதிகள், சீனா

ஆனால் இது இந்தியாவின் உணர்வு மட்டுமின்றி, இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு சார்ந்தது என பாராளுமன்ற கூட்டுக்குழுவின் தலைவர் மீனாட்சி லெகி கூறினார். மேலும் இது 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை பெறக்கூடிய குற்றம் எனவும் அவர் தெரிவித்தார். தற்போது டுவிட்டர் நிறுவனத்தின் பிரதிநிதிகள் இன்று பாராளுமன்ற கூட்டுக்குழு முன் மீண்டும் ஆஜராகினர்.

அப்போது அவர்கள் காஷ்மீர், லடாக் பகுதிகள் சீனாவில் உள்ளது என இருப்பிட அமைப்பை வெளியிட்டதற்கு பாராளுமன்ற கூட்டுக்குழு முன் வாய்மொழியாக பகீரங்க மன்னிப்பு கோரினர். முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களில் மதிப்பளித்து இந்திய அரசுடன் இணைந்து செயல்படுவது டுவிட்டர் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


Tags :