Advertisement

திருச்சியில் ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது

By: Monisha Sat, 21 Nov 2020 1:16:40 PM

திருச்சியில் ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது

திருச்சி மாவட்டம் சமயபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சமயபுரம் அருகே உள்ள புறத்தாக்குடியில் சந்தேகத்திற் கிடமான வகையில் வந்த ஒரு சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் 25 கிலோ எடை கொண்ட 30 மூட்டை ரேஷன் அரிசி கடத்திச்செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே சரக்கு ஆட்டோவில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள், மேலரசூரை சேர்ந்த பரமசிவம்(வயது 31), குறும்பர் தெருவை சேர்ந்த பிரபு(27) என்பதும் தெரியவந்தது.

rice,smuggling,arrest,seizure,investigation ,அரிசி,கடத்தல்,கைது,பறிமுதல்,விசாரணை

அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மேலும் 10 மூட்டைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. ரேஷன் கடையில் வழங்கப்படும் அரிசியை வீடு, வீடாகச் சென்று குறைந்த விலைக்கு வாங்கி அதை கோழித் தீவனமாகவும், ஓட்டல்களுக்கும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய பதுக்கி இருந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 40 மூட்டைகளில் இருந்த 1 டன் ரேஷன் அரிசியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பரமசிவம், பிரபு ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.மேலும் சரக்கு ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர்களையும், அரிசி மூட்டைகளையும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

Tags :
|
|