Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருப்பூரில் இரண்டு மணிநேரம் வெளுத்தெடுத்த கனமழை; வாகன ஓட்டுனர்கள் அவதி

திருப்பூரில் இரண்டு மணிநேரம் வெளுத்தெடுத்த கனமழை; வாகன ஓட்டுனர்கள் அவதி

By: Nagaraj Sat, 18 July 2020 9:24:34 PM

திருப்பூரில் இரண்டு மணிநேரம் வெளுத்தெடுத்த கனமழை; வாகன ஓட்டுனர்கள் அவதி

இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையின் காரணமாக திருப்பூரின் முக்கிய சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் மாலை 4 மணி முதல் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.

2 hours,heavy rain,tiruppur,motorists,severe suffering ,2 மணி நேரம், கனமழை, திருப்பூர், வாகன ஓட்டிகள், கடும் அவதி

கனமழையின் காரணமாக திருப்பூர் வடக்கு தொகுதிக்குட்பட்ட போயம்பாளையம் பிச்சம்பாளையம் மற்றும் புதிய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் மழை நீர் சாலைகளில் வெள்ளம் போல தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்தனர்.

சில பகுதிகளில் சாக்கடை அடைப்பு காரணமாக சாக்கடை நீரோடு மழைநீரும் வீட்டிற்குள் சென்றதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். தொடர்மழையால் ஆங்காங்கே போக்குவரத்து பாதிப்பும், நெரிசலும் ஏற்பட்டது.

Tags :