Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருவள்ளூரில் ஏரியில் மீன் பிடிக்க சென்ற 2 பேர் நீரில் மூழ்கி பலி

திருவள்ளூரில் ஏரியில் மீன் பிடிக்க சென்ற 2 பேர் நீரில் மூழ்கி பலி

By: Monisha Thu, 20 Aug 2020 10:29:00 AM

திருவள்ளூரில் ஏரியில் மீன் பிடிக்க சென்ற 2 பேர் நீரில் மூழ்கி பலி

திருவள்ளூரை அடுத்த பூண்டி பகுதியை சேர்ந்தவர் காளிதாஸ் (வயது 42). இவருடைய மகன் இமான் (16). பூண்டியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு முடித்துவிட்டு, தற்போது பிளஸ்-1 வகுப்பு செல்ல இருந்தா ர்.

நேற்று மாலை இமான், அவரது உறவினர் மகனான சஞ்சய் குமார் (19) என்பவருடன் பூண்டியில் உள்ள ஏரியில் மீன் பிடிப்பதற்காக சென்றார். அங்கு இருவரும் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, திடீரென நிலைத்தடுமாறிய இமான் தண்ணீரில் தவறி விழுந்து மூழ்கினார்.

அதிர்ச்சியடைந்த சஞ்சய்குமார், தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த இமானை காப்பாற்ற நீரில் குதித்தார். இருவருக்கும் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தனர்.

lake,fishing,dead,postmortem,investigation ,ஏரி,மீன் பிடிப்பு,உயிரிழப்பு,பிரேத பரிசோதனை,விசாரணை

இதுபற்றி தகவல் அறிந்ததும், மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரின் உடல்களையும் மீட்டனர். இதனை தொடர்ந்து இருவரின் பெற்றோர்கள், உறவினர்கள் ஆகியோர் அவர்களது உடலை கண்டு கதறி அழுதது காண்போர் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த புல்லரம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நீரில் மூழ்கி இறந்த சஞ்சய்குமார், இமான் ஆகியோர் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
|
|