Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தொடர்பான காங்கிரசின் குற்றச்சாட்டுகளுக்கு மத்திய மந்திரி மறுப்பு

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தொடர்பான காங்கிரசின் குற்றச்சாட்டுகளுக்கு மத்திய மந்திரி மறுப்பு

By: Karunakaran Mon, 27 July 2020 10:47:35 AM

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தொடர்பான காங்கிரசின் குற்றச்சாட்டுகளுக்கு மத்திய மந்திரி மறுப்பு

ஒரு தொழிற்சாலையோ, திட்டமோ தொடங்க சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தாக்கல் செய்யப்படுவது அவசியம். கடந்த 2006-ம் ஆண்டில் இருந்து நடைமுறையில் உள்ள விதிகளின்படி இது செய்யப்படுகிறது. இதன் காரணமாக சுற்றுச்சூழலை பாதிக்கும் திட்டங்களை செயல்படுத்த முடியாதநிலை ஏற்பட்டது.

தற்போது, இதில் சில தளர்வுகளை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான வரைவு அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளதில் இந்த அறிக்கை இல்லாமலேயே திட்டங்களை ஆரம்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து ஆகஸ்டு 11-ம் தேதி வரை பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று கூறியது.

congress,union minister,eia report,denies ,காங்கிரஸ், மத்திய மந்திரி, EIA அறிக்கை மறுப்பு

இந்நிலையில் முன்னாள் மத்திய சுற்றுச்சூழல்துறை மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஜெய்ராம் ரமேஷ் மத்திய அரசின் இந்த தளர்வு அறிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது மக்களின் சுகாதாரத்துக்கும், நலனுக்கும் எதிராக அமையும் என்று கூறினார்.

தற்போது இந்த குற்றச்சாட்டுகளை மத்திய சுற்றுச்சூழல்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நிராகரித்துள்ளார். இதுகுறித்து மந்திரி பிரகாஷ் ஜவடேகர், ஜெய்ராம் ரமேஷ் கூறியவை தவறான புரிதலின் அடிப்படையில் கூறிய தவறான குற்றச்சாட்டுகள். மத்திய அரசின் முடிவுகள் அனைத்தும் பாராளுமன்றம் மற்றும் நிலைக்குழுக்களின் ஆய்வுக்கு உட்பட்டவை. தற்போது, பொதுமக்கள் கருத்துக்காக வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்மீது வரும் யோசனைகள் அடிப்படையில் மத்திய அரசு இறுதி முடிவு எடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Tags :