Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 2+2 பேச்சுவார்த்தையில் பங்கேற்க இந்தியா வந்து சேர்ந்த அமெரிக்க மந்திரிகள்

2+2 பேச்சுவார்த்தையில் பங்கேற்க இந்தியா வந்து சேர்ந்த அமெரிக்க மந்திரிகள்

By: Karunakaran Mon, 26 Oct 2020 4:59:30 PM

2+2 பேச்சுவார்த்தையில் பங்கேற்க இந்தியா வந்து சேர்ந்த அமெரிக்க மந்திரிகள்

இந்திய, அமெரிக்க வெளியுறவு மற்றும் ராணுவ மந்திரிகள் இடையே கடந்த 2018-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் 2+2 பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மூன்றாவது 2+2 பேச்சுவார்த்தை இன்று நாளை டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ, ராணுவ மந்திரி மார்க் எஸ்பர் ஆகியோர் இன்று இந்தியா வருகின்றனர்.

நேற்று நள்ளிரவில் அமெரிக்காவில் இருந்து விமானத்தில் புறப்பட்ட அவர்கள் இருவரும் இன்று பிற்பகல் டெல்லி வந்து சேர்ந்தனர். மைக் பாம்பியோவுடன் அவரது மனைவி சூசன் பாம்பியோவும் வந்துள்ளார். அவர்களை விமான நிலையத்தில் உயர் அதிகாரிகள் வரவேற்றனர். டெல்லியில் நாளை நடைபெறும் பேச்சுவார்த்தையில் மைக் பாம்பியோ, மார்க் எஸ்பர் ஆகியோருடன் இந்தியாவின் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் ஆகியோர் தலைமையிலான குழு பேச்சுவார்த்தை நடத்துகிறது.

us ministers,india,2 + 2 talks,mike pompeo ,அமெரிக்க அமைச்சர்கள், இந்தியா, 2 + 2 பேச்சுக்கள், மைக் பாம்பியோ

இந்த சந்திப்பின்போது பிராந்திய பாதுகாப்பு மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து பேசப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தையில் பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பு, ராணுவ தகவல் பகிர்வு, ராணுவ தொடர்புகள் மற்றும் பாதுகாப்பு வர்த்தகம் ஆகிய அம்சங்களில் கவனம் செலுத்தப்படும் என அமெரிக்க வெளியுறவுத்துறை கூறியது குறிப்பிடத்தக்கது.

டிரம்ப் நிர்வாகத்தின் வெளியுறவுத்துறை மந்திரியாக பாம்பியோ நான்காவது முறையாக இந்தியாவிற்கு வந்துள்ளார். அவரது இந்த சுற்றுப் பயணத்தின்போது 2+2 பேச்சுவார்த்தை தவிர பிரதமர் மோடியையும் சந்தித்து பேச உள்ளார். இதற்கு முன்னதாக தனது பயணம் குறித்து பாம்பியோ தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தியா, இலங்கை, மாலத்தீவு மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாகவும், மூன்றாவது 2+2 பேச்சுவார்த்தையை நடத்துவது ராஜதந்திர மற்றும் பாதுகாப்பு நோக்கங்களுக்கான இந்தியா-அமெரிக்காவின் உறுதிப்பாட்டை நிரூபிக்கிறது என்று கூறினார்.

Tags :
|