Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீனாவின் செயலியான டிக்டாக்கை தடை செய்வது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பரிசீலினை

சீனாவின் செயலியான டிக்டாக்கை தடை செய்வது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பரிசீலினை

By: Karunakaran Sat, 01 Aug 2020 6:18:37 PM

சீனாவின் செயலியான டிக்டாக்கை தடை செய்வது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பரிசீலினை

கடந்த ஜூன் மாதம் 15-ம் தேதி லடாக் எல்லையில் இந்திய - சீன ராணுவத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த மோதலுக்கு பின் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. எல்லையில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து, சீனப் பொருட்களை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என போராட்டம் நடைபெற்றது.

அதன்பின் மத்திய அரசு சீன நிறுவனங்களின் செல்போன் செயலிகளுக்கு தடை விதித்தது. தேச நலனுக்கு எதிராகவும் தனிநபர் தரவுகள் பகிரப்படும் அபாயம் இருப்பதாகக் கூறி டிக் டாக் போன்ற சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்தது. தற்போது, சீனாவின் செயலியான டிக்டாக்கை தடை செய்வது குறித்து பரிசீலிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

us president,trump,ban,tiktok ,அமெரிக்க அதிபர், தடை, டிரம்ப்,டிக்டாக்

ஏற்கனவே, அமெரிக்கா-சீனா இடையே வர்த்தகப்போர், கொரோனா வைரஸ் பரவல் குறித்து மோதல் நீடித்து வருகிறது. இதனால், சீனா மீது அமெரிக்கா கடும் கோபத்தில் உள்ளது. தற்போது இருநாடுகளுக்கும் இடையே மோதல் உருவாகி உள்ள நிலையில், சீன செயலியான டிக்டாக்கை தடை செய்ய உள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

டிக் டாக்கிற்கு பதிலாக வேறு மாற்று செயலியை உருவாக்க உள்ளதாகவும், டிக் டாக் நிறுவனத்தின் அமெரிக்க செயல்பாடுகளை மட்டும் வாங்க மைக்ரோசாப்ட் நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags :
|
|