அத்துமீறி பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்திய வீரர் வீரமணம்
By: Nagaraj Sun, 06 Sept 2020 2:13:28 PM
காஷ்மீரில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு இந்திய வீரர் வீரமரணமடைந்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குப்வாரா மாவட்டத்தில் உள்ள நவ்காம் பகுதியில் நேற்று பாகிஸ்தான் படையினர் திடீரெனத் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் பாதுகாப்புப் பணியில் இருந்த பூபிந்தர் சிங் என்ற இந்திய வீரர் வீரமரணம் அடைந்ததாக ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலில் மேலும் இரு வீரர்கள் படுகாயமடைந்து உள்ளதாகக் கூறிய
அவர், இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும்
தெரிவித்தார்.
பின்னர் மாலை நேரத்தில் பூஞ்ச் பகுதியில் ஷாஹ்பூர்,
கிர்னி மற்றும் டெக்வார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் சிறிய ரக குண்டுகளை
வீசி தாக்கியதாகவும், அதற்கு இந்தியத் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டு
உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி
உள்ளது.