நீர்கொழும்பு, மஹர சிறைச்சாலைகளுக்கு பார்வையாளர்கள் செல்ல தடை
By: Nagaraj Sun, 04 Oct 2020 5:48:17 PM
பார்வையாளர்களுக்கு தடை... நீர்கொழும்பு மற்றும் மஹர சிறைச்சாலைகளுக்கு பார்வையாளர்கள் செல்வதற்கு மறு அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கம்பஹா- திவுலபிடிய பகுதியில் வசித்து வரும் 39 வயதுடைய பெண்ணொருவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த பெண், கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதனால், கம்பஹா வைத்தியசாலையில் பணிப்புரிந்த 15 ஊழியர்கள் மற்றும் குறித்த
பெண் பணிபுரிந்து வந்துள்ள தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த சுமார் 40
உறுப்பினர்கள் அவர்களது வீடுகளிலேயே சுய தனிமைப்படுத்தலுக்கு
உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில்
மக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு கம்பஹா மாவட்டத்தின் மினுவாங்கொட
மற்றும் திவுலபிடிய பகுதியில் உள்ள 7 கிராம சேவகர் பிரிவுகளுக்கு மறு
அறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளமையும்
குறிப்பிடத்தக்கது.