கடுமையான குளிர்காலத்தில் மது அருந்தாதீர்கள் என எச்சரிக்கை
By: Nagaraj Mon, 28 Dec 2020 4:22:24 PM
கடுமையான குளிர்ச்சியின் விளைவுகளை எதிர்கொள்ள உங்கள் சருமத்தை தொடர்ந்து ஈரப்பதமாக வைத்திருங்கள். ஆல்கஹால் உடல் வெப்பத்தை மேலும் வெகுவாக குறைத்துவிடும் என்பதால் மது அருந்த வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
டெல்லி, பஞ்சாப், பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. அனைத்து பகுதிகளும் பனிப்போர்வை போர்த்தியது போன்று இரவு முதல் காலை வரை காட்சியளிக்கிறது. காலை வேளையில் சாலைகள் முழுவதும் பனிமூட்டமாக காணப்படுவதால் வாகன போக்குவரத்து குறைந்துள்ளது.
நீண்ட நேரம் பனி விழும் என்பதால் காலையில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியில் வர முடியாத நிலையில் உள்ளனர். குளிரில் இருந்து தற்காத்துக் கொள்ள தீமூட்டி குளிர்காய்கின்றனர்.
இந்த நிலையில், குளிர் தெரியாமல் இருக்க மது பிரியர்கள் மது அருந்துவதும்
அதிகரித்துள்ளது. வட மாநிலங்களில் வரும் நாட்களில் குளிர் மேலும்
தீவிரமடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
நாளை
(டிச.29) முதல் பஞ்சாப், அரியானா, டெல்லி, உத்தர பிரதேசம் மற்றும் வடக்கு
ராஜஸ்தானில் குளிர் மேலும் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே பொதுமக்கள் தேவையின்றி வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும்.
வைட்டமின்-சி நிறைந்த பழங்களை உண்ணுங்கள்.
கடுமையான குளிர்ச்சியின்
விளைவுகளை எதிர்கொள்ள உங்கள் சருமத்தை தொடர்ந்து ஈரப்பதமாக வைத்திருங்கள்.
ஆல்கஹால் உடல் வெப்பத்தை மேலும் வெகுவாக குறைத்துவிடும் என்பதால் மது
அருந்த வேண்டாம். வீடுகளிலோ அல்லது புத்தாண்டு கொண்டாட்டங்களிலோ மது
அருந்துவது நல்லதல்ல எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.