Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இனி எந்த போர் நடந்தாலும் வெற்றி நமக்குதான்; அதிபர் டிரம்ப் பெருமிதம்

இனி எந்த போர் நடந்தாலும் வெற்றி நமக்குதான்; அதிபர் டிரம்ப் பெருமிதம்

By: Nagaraj Mon, 15 June 2020 4:55:48 PM

இனி எந்த போர் நடந்தாலும் வெற்றி நமக்குதான்; அதிபர் டிரம்ப் பெருமிதம்

இனி வெற்றி நமக்கு மட்டுமே... இனி எந்தப் போராக இருந்தாலும் அதில் வெற்றி நமக்கு மட்டுமே என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஓக்லஹாமாவில் உள்ள அமெரிக்க இராணுவ பயிற்சி நிலையத்தில், அதிகாரிகளுக்கான பயிற்சி நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பயிற்சி நிறைவு செய்தவர்கள் மத்தியில் உரையாற்றிய போதே ட்ரம்ப் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், “நம் இராணுவத்தின் அடிப்படை கொள்கையை மீட்க உள்ளோம். வெளிநாடுகளில் அமைதி மற்றும் வளர்ச்சி ஏற்படுத்துவது அவர்களுடைய பணி அல்ல. நம் நாட்டை, எதிரிகளிடமிருந்து பாதுகாப்பதே, இராணுவத்தின் முக்கிய நோக்கமாகும்.

war,victory,military,we have,president trump ,போர், வெற்றி, இராணுவத்தினர், நமக்குதான், அதிபர் டிரம்ப்

முடிவே இல்லாமல் நடந்து வரும் போர்களை நிறுத்த உள்ளோம். அதற்கு பதிலாக, நம்நாட்டை வலிமைபடுத்துவதில் கவனம் செலுத்துவோம். எங்கேயோ தொலைவில் உள்ள, பெயர்கூட தெரியாத நாடுகளுக்கு நம் படைகளை அனுப்பி வந்தோம். அமெரிக்க இராணுவம் என்ன, உலக நாடுகளின் பொலிசா. அதே நேரத்தில், நம் எதிரிகளுக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கிறேன்.

அமெரிக்க மக்களுக்கு எதிராக எங்கு எந்த நடவடிக்கை நடந்தாலும், உடனடியாக செயற்பட தயங்க மாட்டோம். இனி எந்தப் போராக இருந்தாலும், அதில் வெற்றி நமக்கு மட்டுமே. அடிமைத்தனம் நமது இராணுவத்தினருக்கு, உலகின் தலைசிறந்த ஆயுதங்கள், தளபாடங்கள், தொழில்நுட்ப வசதிகள் கிடைப்பதை நாம் உறுதி செய்து உள்ளோம். அமெரிக்க வரலாற்றிலேயே, இராணுவத்துக்கு அதிக நிதியை ஒதுக்கியது நான் தான். இந்த உலகில், மிகவும் வலுவான இராணுவம் என்றால், அது அமெரிக்காவுடையது மட்டும் தான்.

ஓக்லஹாமாவில் உள்ள இந்த இடத்தில் தான், 1921ஆம் ஆண்டு கறுப்பின மக்கள் அடிமைதனத்தில் இருந்து விடுதலை பெற்ற போர் நடந்தது. அடிமைத்தனம் என்ற தீமையை அணைக்கும் போரில், நம் இராணுவத்தினர் சிறப்பாக செயற்பட்டதை எந்தக் காலத்திலும் மறக்கக் கூடாது” என கூறினார்.

Tags :
|