Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சச்சின் பைலட்டுக்கு 2-வது வாய்ப்பு கொடுக்கிறோம் - ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர்

சச்சின் பைலட்டுக்கு 2-வது வாய்ப்பு கொடுக்கிறோம் - ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர்

By: Karunakaran Tue, 14 July 2020 1:41:58 PM

சச்சின் பைலட்டுக்கு 2-வது வாய்ப்பு கொடுக்கிறோம் - ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர்

ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்-மந்திரி அசோக் கெலாட், துணை முதல்-மந்திரி சச்சின் பைலட்டுக்கும் இடையே நீண்ட காலமாக அதிகார மோதல் உள்ளது. கடந்த நாட்களாக இந்த மோதல் பகிரங்கமாக வெடித்து பெரிதாகியுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் சச்சின் பைலட் தனக்கு 30 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாகவும், கெலாட் அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதாகவும் கூறினார். இருப்பினும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் முதல்-மந்திரிக்கே ஆதரவாக இருப்பதாக கெலாட் தரப்பு தெரிவித்தது.

sachin pilot,rajasthan,congress,meeting ,சச்சின் பைலட், ராஜஸ்தான், காங்கிரஸ், கூட்டம்

இந்நிலையில் கட்சியின் சட்டசபைக்குழு கூட்டம் நேற்று முதல்-மந்திரி அசோக் கெலாட் வீட்டில் நடந்தது. இதில் சச்சின் பைலட்டும், அவரது ஆதரவாளர்கள் என கருதப்படும் சில எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்கவில்லை. தற்போது, சச்சின் பைலட் தனக்கு 30 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதை நிரூபிக்க அவர்களது வீடியோவை வெளியிட்டு உள்ளார்.

தற்போது ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் அவினாஷ் பாண்டே, நாங்கள் சச்சின் பைலட்டுக்கு 2-வது வாய்ப்பு கொடுக்கிறோம். இன்று நடைபெறும் எம்.எல்.ஏ.-க்கள் கூட்டத்தில் அவர் கலந்து கொள்ள வேண்டும் கேட்டுக்கொள்கிறோம். இன்று அனைத்து எம்.எல்.ஏ.-க்களும் ஒன்றிணைந்து, தலைமைப்பு ஆதரவு கொடுப்பார்கள் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Tags :