வைத்தியசாலை வசதிகள் செய்து தராவிட்டால் தப்பி செல்வோம்; கொரோனா நோயாளிகள் மிரட்டல்
By: Nagaraj Tue, 27 Oct 2020 9:02:56 PM
அச்சுறுத்தல் விடுத்த நோயாளிகள்... வைத்தியசாலையில் போதுமான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவில்லையாயின், அங்கிருந்து தப்பி சென்று கிராமத்திற்குள் கொரோனாவை பரப்பப் போவதாக சிகிச்சை பெறும் நோயாளிகள் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் சிங்கள இணைய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
திவுலப்பிட்டிய கொரோனா நோயாளர்கள் குழுவினரின் செயற்பாடு காரணமாக வைத்தியசாலை நிர்வாகம் அசௌகரியத்திற்கு முகங்கொடுத்துள்ளது. தங்களுக்கு கிடைக்கும் உணவு சுவையில்லை எனவும், போதுமான அளவு குளியலறை மற்றும் ஏனைய வசதிகள் இல்லை எனவும் கூறி நோயாளர்கள் குழப்பம் ஏற்படுத்தியுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்படும் பொதுமக்களுக்கு
எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா
அதிபர் அஜித் ரோஹண எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த தினங்களில்
பொதுப் போக்குவரத்தில் உரிய முறைமையில் சுகாதார ஒழுங்குவிதிகள்
பின்பற்றப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதேநேரம், பொது
இடங்களிலும், வரிசைகளிலும் தனிமைப்படுத்தல் ஒழுங்குவிதிகளை பொதுமக்கள்
பின்பற்றாத நிலையை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
பொதுமக்கள் தொடர்ந்தும் இவ்வாறாக செயற்படுவார்களாயின் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் பேச்சாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.