Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில் நத்தை வேகத்திற்கான காரணம் என்ன ?

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில் நத்தை வேகத்திற்கான காரணம் என்ன ?

By: Karunakaran Sun, 08 Nov 2020 10:33:27 AM

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில் நத்தை வேகத்திற்கான காரணம் என்ன ?

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவை அகில உலகமே எதிர்பார்த்து காத்துக்கிடக்கிறது. ஆனால் ஓட்டு எண்ணிக்கையில் ஏன்தான் இந்த நத்தை வேகம் என்று உலகமே அங்கலாய்த்து கொண்டிருக்கிறது. அதற்கான காரண காரியங்கள் என்ன தெரியுமா? அமெரிக்காவின் 50 மாகாணங்களும் தேர்தல்கள் நடத்துவதிலும், ஓட்டு எண்ணிக்கையிலும் மாறுபட்ட சட்டங்களை கொண்டிருக்கின்றன. அங்கே மத்திய சட்டம் என்பது, ஓட்டு எண்ணிக்கை முடிக்க வேண்டிய பாதுகாப்பான காலக்கெடுவை நிர்ணயிப்பதில் மட்டுமே அடங்கி இருப்பதால் டிசம்பர் 8-ந்தேதிவரை ஓட்டு எண்ணிக்கையை நடத்த முடியும்.

பல மாகாணங்கள் முன்கூட்டியே நேரில் ஓட்டு போட அனுமதிக்கின்றன. இதே போன்று தபால் மூலமும் வாக்கு அளிக்க அனுமதி உண்டு. இந்த வாக்குகளை சில மாகாணங்கள் தேர்தல் நாளான நவம்பர் 3-ந்தேதி வரை எண்ணத் தொடங்கவில்லை. இந்த மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை நீண்ட காலம் நடக்கிறது. இந்த தேர்தலில் 10 கோடியே 13 லட்சம் வாக்காளர்கள் முன்கூட்டியே வாக்கு அளித்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி இருக்கிறார்கள்.

snail pace,us,presidential election,vote count ,நத்தை வேகம், அமெரிக்கா, ஜனாதிபதி தேர்தல், வாக்கு எண்ணிக்கை

நமது இந்தியாவில் தபால் ஓட்டு எண்ணிக்கை என்பது மிகக்குறைவான அளவுதான். பாதுகாப்பு படையினர், தேர்தல் பணியாளர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் உள்ளிட்ட சில பிரிவினர் மட்டுமே இங்கு தபால் வாக்கு அளிக்க முடியும். ஆனால் அமெரிக்காவில் தபால் ஓட்டு யார் வேண்டுமானாலும் போடலாம். தபால் வாக்குகளை பெறுவதிலும், அவற்றை எண்ணுவதிலும் உள்ள மாறுபட்ட விதிமுறைகள் ஓட்டு எண்ணிக்கையை தாமதப்படுத்தியது.

வட கரோலினா மாகாணத்தில் தபால் ஓட்டுகளை வரும் 12-ந்தேதி வரை பெற முடியும். எனவே வாக்கு எண்ணிக்கை அங்கே தொடரும். பொதுவாக வாக்குச்சீட்டின் மூலம் நடக்கிற தேர்தலில் ஓட்டு எண்ணிக்கை அதிக நேரம் பிடிக்கும். மின்னணு வாக்கு எந்திரங்கள் அமெரிக்காவில் பயன்படுத்தப்படுவதில்லை. வாக்குச்சீட்டு நடைமுறைதான். இ-ஓட்டு பேக்ஸ் அல்லது இமெயில் மூலம் அனுமதிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவல் அச்சத்தால்தான் அதிக பேர் தேர்தல் நாள் வரை காத்திருக்காமல் முன்கூட்டியே வாக்கு அளித்திருக்கிறார்கள்.

Tags :
|