Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வேளாண் சட்டங்களை முதல்வர் எதிர்க்காதது ஏன்? மு.க. ஸ்டாலின் கேள்வி

வேளாண் சட்டங்களை முதல்வர் எதிர்க்காதது ஏன்? மு.க. ஸ்டாலின் கேள்வி

By: Monisha Wed, 23 Dec 2020 12:26:08 PM

வேளாண் சட்டங்களை முதல்வர் எதிர்க்காதது ஏன்? மு.க. ஸ்டாலின் கேள்வி

சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தி.மு.க. கட்சி தயாராகி வருகிறது. 'அ.தி.மு.க.வை நிராகரிப்போம்' என்ற தலைப்பில் தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் பஞ்சாயத்துகளில் கிராம சபை மற்றும் வார்டு கூட்டங்கள் நடத்த முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, இன்று முதல் பத்து நாட்களுக்கு கிராமங்கள் மற்றும் வார்டுகளில் 16 ஆயிரம் கிராமசபை கூட்டங்களை நடத்த இருக்கிறார்கள்.

இந்நிலையில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றியம், குன்னம் ஊராட்சியில் நடக்கும் கிராமசபை கூட்டத்தை தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் நடத்தி வருகிறார். தேர்தலையொட்டி கிராம சபை கூட்டத்தில் மக்களின் குறைகள் மற்றும் தேவைகளை கேட்டறிகிறார்.

election,grama niladhari,jayalalitha,rule,agricultural laws ,தேர்தல்,கிராம சபை,ஜெயலலிதா,ஆட்சி,வேளாண் சட்டங்கள்

கிராம சபை கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் கூறியதாவது:- ஜெயலலிதாவின் மரணம் இன்றும் மர்மமாக இருக்கிறது. விசாரணை கமிஷனை நீடிக்கிறார்களே தவிர, முடிவு வரவில்லை. ஜெயலலிதா எங்களுக்கு எதிரிதான் என்றாலும் அவர் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர்.

கட்சி தொடங்கிய 24 மணி நேரத்தில ஆட்சியைப் பிடிப்போம் என சொல்கிறார்கள். நானும் ரவுடி ரவுடி என சொல்வதுபோல் தான் விவசாயி விவசாயி என முதலமைச்சர் கூறி வருகிறார். விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டத்தை அவர் எதிர்க்காதது ஏன்? மேலும், ஒப்பந்தங்கள் மூலம் ரூ.6,131 கோடி முறைகேடு நிகழ்ந்துள்ளது என அவர் கூறினார்.

Tags :
|