Advertisement

வேகத்தடை எச்சரிக்கை பலகையை உடைத்தெறிந்த காட்டுயானை

By: Nagaraj Fri, 06 Nov 2020 6:50:39 PM

வேகத்தடை எச்சரிக்கை பலகையை உடைத்தெறிந்த காட்டுயானை

வேகத்தடை பலகையை உடைத்த யானை... சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரியில் இருந்து மைசூர் செல்லும் தேசிய‌ நெடுஞ்சாலையில் சாலையோரம் இருந்த வேகத்தடை எச்சரிக்கை பலகையை யானை கோபத்தோடு உடைக்கும் காட்சி வெளியாகியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசிக்கின்றன இவை அவ்வப்போது சாலையோரம் நின்று அவ்வழியாக கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரிகளை வழிமறித்து கரும்புகளை உண்பது வாடிக்கையாகி வருகின்றன.

erode,loud,wild elephant,warning board,broken ,ஈரோடு, அட்டகாசம், காட்டுயானை, எச்சரிக்கை பலகை, உடைத்தது

இந்நிலையில் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரியில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுற்றித்திரிந்த காட்டு யானை ஒன்று வாகனங்களை வழிமறித்து அங்கும் இங்கும் சாலையில் குறுக்கே நடமாடியது.

திடீரென கோபமடைந்த யானை சாலையோரம் இருந்த வேகத்தடை எச்சரிக்கை பலகை அடித்து துவம்சம் செய்தது இதை அவ்வழியாக வந்த வாகன ஓட்டி ஒருவர் படம்பிடித்துள்ளார். தற்போது இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

Tags :
|
|