ஜல்லிக்கட்டு போட்டி நடக்குமா; அமைச்சர் செல்லூர் ராஜுவின் பதில்
By: Nagaraj Mon, 14 Dec 2020 09:51:58 AM
கொரோனா பரவல் காரணமாக ஜல்லிக்கட்டு நடக்குமா என்ற கேள்விக்கு அப்போதைய சூழலில் ஆலோசனை செய்து முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.
மதுரையில் நடைபெற்று வரும் வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாமை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அதிமுகவில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் அதிமுகவுக்கு பெரும் வரவேற்பு இருப்பதாக கூறினார்.
மேலும் உதயநிதிக்கு தானாக சேர்ந்த கூட்டம் இல்லை. காசு கொடுத்து கூடிய
கூட்டம் என கூறிய அமைச்சர், பில்டப் செய்து திமுக கட்சியை வளர்க்க
நினைப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றம் சாட்டினார்.
இந்த
நிலையில் கொரோனா தோற்று பரவும் நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுமா என
செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில்கூறிய அமைச்சர்
ஜல்லிக்கட்டை நடத்த மருத்துவக்குழு ஆலோசனை நடத்தி அப்போதைய கொரானா
நிலவரத்தை கணக்கில் கொண்டு முதல்வர் நடவடிக்கை எடுப்பார் எனக் கூறினார்.