Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் எலிக் காய்ச்சல் அறிகுறிகளுடன் பெண் மரணம்

யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் எலிக் காய்ச்சல் அறிகுறிகளுடன் பெண் மரணம்

By: Nagaraj Mon, 08 June 2020 07:39:17 AM

யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் எலிக் காய்ச்சல் அறிகுறிகளுடன் பெண் மரணம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சுகவீனம் காரணமாக அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் அவருடைய மரணம் எலிக்காய்ச்சல் நோயினால் ஏற்பட்டதா என்ற சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இதனால் குறித்த பெண்ணின் இரத்த மாதிரிகள் மருத்துவ பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவருக்கு காணப்பட்ட நோய் அறிகுறிகள் எலிக்காய்ச்சல் நோய்க்குரிய அறிகுறிகளுடன் ஒத்துக் காணப்பட்டதால் குறித்த சந்தேகம் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

doubt,information,hospital,rat fever ,சந்தேகம், தகவல்கள், வைத்தியசாலை, எலிக்காய்ச்சல்

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சம் அடைந்து வரும் நிலையில் தற்போது இலங்கையில் எலிக்காய்ச்சல் நோய் அறிகுறிகளுடன் பெண் இறந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இருப்பினும் இதுகுறித்து முழுமையான விபரங்கள் வெளி வந்தால் மட்டுமே அந்த பெண்ணின் மரணத்திற்கான காரணம் தெரிய வரும் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags :
|