Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்திவிட்டு விஷம் குடித்த வாலிபர் கைது

இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்திவிட்டு விஷம் குடித்த வாலிபர் கைது

By: Monisha Wed, 03 June 2020 5:53:36 PM

இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்திவிட்டு விஷம் குடித்த வாலிபர் கைது

ராஜஸ்தான் மாநிலம் நத்தா கி நங்கல் என்ற கிராமத்தை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். இவர் நீம் கா தானா என்ற இடத்தில் உள்ள பயிற்சி மையத்தில் போட்டி தேர்வுக்காக படித்து வந்துள்ளார். அதே மையத்தில் வாலிபர் ஒருவரும் படித்து வந்தள்ளார்.

அந்த இளம்பெண்ணிடம் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் அந்த பெண் மறுத்துவிட்டார். இதனால் விரக்தியடைந்த அந்த வாலிபர் பெட்ரோலுடன் அந்த பெண் வீட்டிற்கு சென்றுள்ளார்.

refusal to marry,teenager,youth arrested,petrol,poison ,திருமணம் செய்ய மறுப்பு,இளம்பெண்,வாலிபர் கைது,பெட்ரோல்,விஷம்

அந்த பெண் வீட்டிற்குள் நுழைந்ததும் அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். அதை சற்றும் எதிர்பாராத அவரது பெற்றோர் மகளை மீட்டு மருத்துவனையில் சேர்த்தனர்.

இதற்கிடையில் அந்த வாலிபர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Tags :
|