- வீடு›
- சமையல் குறிப்புகள்›
- சுவையான ருசி மிகுந்த தேங்காய்ப்பால் பாயாசம் செய்முறை
சுவையான ருசி மிகுந்த தேங்காய்ப்பால் பாயாசம் செய்முறை
By: Nagaraj Wed, 21 Oct 2020 8:43:32 PM
தேங்காய்ப் பால் குடல் புண்களை ஆற்றும் தன்மை கொண்டது, மேலும் இது உடல் எடையினை அதிகரிக்கும் தன்மை கொண்டுள்ளதால் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். இப்போது தேங்காய்பால் பாயாசம் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையானவை:
தேங்காய் - 1
பச்சரிசி - அரை கப்
ஏலக்காய்த்தூள் - ஒரு ஸ்பூன்
வெல்லம் – 1/4 கிலோ
காய்ந்த திராட்சை - 10 கிராம்
முந்திரி - 10 கிராம்
செய்முறை: வாணலியில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சையை வறுத்துக்
கொள்ளவும். அடுத்து தேங்காயில் தண்ணீர் சேர்த்து குறைந்தது 4 முறை பால்
எடுத்துக் கொள்ளவும்.
தேங்காய்ப்பாலை பாத்திரத்தில் ஊற்றி அரிசியைப்
போட்டு வேகவிடவும். அதனுடன் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து அரிசியுடன்
கலந்து முந்திரி, திராட்சை, ஏலக்காய்ப்பொடி சேர்த்து இறக்கினால் தேங்காய்ப்
பால் பாயாசம் ரெடி.