Advertisement

நாவில் எச்சில் ஊறவைக்கும் பாறை மீன் குழம்பு செய்யும் விதம்

By: Nagaraj Mon, 14 Sept 2020 08:34:45 AM

நாவில் எச்சில் ஊறவைக்கும் பாறை மீன் குழம்பு செய்யும் விதம்

மீனில் பலவகையான குழம்பு வகைகள் செய்து ருசித்து இருப்பீர்கள். ரொம்பவும் டேஸ்ட்டியான பாறை மீன் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:


பாறை மீன் – 1/2 கிலோ
துருவிய தேங்காய் – அரை கப்
மஞ்சள்தூள் - 1டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 2 டேபிள்ஸ்பூன்
மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
மிளகு - 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 டேபிள்ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 10
வெங்காயம் - 2
கறிவேப்பிலை - தேவையான அளவு
தக்காளி - 1
புளி தண்ணீர் – 1/2 கப்
பூண்டு - 10 பல்
உப்பு- தேவையான அளவு,
நல்லெண்ணெய் - தேவையான அளவு

onions,tomatoes,curry leaves,rock fish ,வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, பாறை மீன்

செய்முறை: மீனை கழுவி புளித்தண்ணீர், மஞ்சள் தூள் சேர்த்து கலந்து ஊறவிடவும். தேங்காய், மிளகு, மஞ்சள் தூள், மிளகு, சீரகம், மல்லித்தூள், மிளகாய் தூள், பூண்டு, சின்னவெங்காயம், மற்றும் உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும். இதனை புளித்தண்ணீரில் கலந்து கொள்ளவும்.

அடுத்து வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலையை நறுக்கி அதனை சேர்த்து கொதிக்கவிட்டு, நல்லெண்ணெய் ஊற்றி இறக்கினால் பாறை மீன் குழம்பு ரெடி. அருமையான சுவையில் இருக்கும் இதனை உங்கள் குடும்பத்தினர் ரசித்து சாப்பிடுவார்கள்.

Tags :
|