Advertisement

நாவில் கரையும் கோதுமை அல்வா செய்வது எப்படி?

By: Monisha Wed, 23 Dec 2020 2:19:29 PM

நாவில் கரையும் கோதுமை அல்வா செய்வது எப்படி?

கோதுமையில் நாவில் கரையும் அல்வா தயார் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
சம்பா கோதுமை - கால் கிலோ
நெய் - கால் கிலோ
சர்க்கரை - முக்கால் கிலோ
முந்திரிப்பருப்பு - 50 கிராம்
ஏலக்காய் - ஒரு டீஸ்பூன்
கலர் - சிறிதளவு
எலுமிச்சம்பழசாறு - ஒரு டீஸ்பூன்.

wheat,ghee,sugar,cashews,lemon juice ,கோதுமை,நெய்,சர்க்கரை,முந்திரிப்பருப்பு,எலுமிச்சம்பழசாறு

செய்முறை
முதலில் கோதுமையை முந்தின நாள் இரவே ஊறவைத்து மறுநாள் காலையில் அரைத்து, பிழிந்து பால் எடுக்கவும். பாலும் தண்ணீரும் சேர்ந்து ஒரு லிட்டர் இருக்கும்படி எடுத்துக் கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து கோதுமைப் பாலில் சர்க்கரையைக் கொட்டி அடி பிடிக்காமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.

கரண்டியில் ஒட்டும்போது சிறிது சிறிதாக நெய் விட்டுக் கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் அல்வா பதம் வந்ததும் நெய் மேலாக பிரிந்து வரும். இந்த நெய்யை தனியாக எடுத்துவிடவும். பிறகு, இதில் கலர், எலுமிச்சம்பழ சாறு, ஏலக்காய்த்தூள், நெய்யில் வறுத்த முந்திரியை சேர்த்து, மிதமான தீயில் அரை மணி நேரம் கிளறி இறக்கவும். கோதுமை அல்வா தயார்.

Tags :
|
|
|