Advertisement

  • வீடு
  • உறவுகள்
  • உறவில் இருந்து விலகுவதற்கு முன்னால் பெண்கள் இப்படித்தான் நடந்து கொளவர்கள்...ஆண்களே உஷார்!

உறவில் இருந்து விலகுவதற்கு முன்னால் பெண்கள் இப்படித்தான் நடந்து கொளவர்கள்...ஆண்களே உஷார்!

By: Monisha Mon, 29 June 2020 1:06:30 PM

உறவில் இருந்து விலகுவதற்கு முன்னால் பெண்கள் இப்படித்தான் நடந்து கொளவர்கள்...ஆண்களே உஷார்!

காதல் என்பது ஒரு அற்புதமான உணர்வாகும். அனைவரின் வாழ்க்கையிலும் காதல் இன்றியமையாத ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. திருமண வாழ்க்கையில் மற்ற விஷயங்களைப் போலவே உடலுறவிற்கும் முயற்சி தேவை. சரியான முறையில் உடலுறவு செய்யாவிட்டால் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் அது சலிப்புத்தன்மையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. முக்கியமாக நீங்களும் உங்கள் துணையும் புரிதலுடன் இருக்க வேண்டும்.

காதலியோ அல்லது மனைவியோ உங்களது உறவில் இருந்து விலகி போவதற்கு முன்னால் சில அறிகுறிகளை கொடுத்து காரணங்களை உருவாக்கிக் கொள்வார்கள். அதவாது பொதுவாக மெசேஜ் அனுப்புவதை நிறுத்தி விடுவார்கள். மெசேஜ் அனுப்புவது என்பது பெண்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். எனவே மெசேஜ் அனுப்புவதை நிறுத்தி விட்டால் உடனே உஷாராகி விடுங்கள்.

women,love,wife,relationship,men ,பெண்கள்,காதல்,மனைவி,உறவு,ஆண்கள்

உங்கள் காதலி சில நேரங்களில் தங்கள் நண்பர்களுடன் அல்லது குடும்பத்தினருடன் வெளியே செல்லும் போது உங்களுக்கு சொல்லாமலோ அல்லது அவரது பிறந்த நாளை நீங்கள் மறந்துவிட்டலோ உங்களிடம் அதே பற்றி கேக்காமலோ சண்டை போடாமலோ இருந்தாலோ அவரது வாழ்க்கையில் நீங்கள் முக்கியமாக இல்லை என்று அர்த்தம்.

மேலும் ஒரு ஆணுடன் நிஜமான காதல் இருக்கும் பெண் உங்களுடைய எதிர்காலம் பற்றி பல யோசனைகளை ரெடியாக வைத்திருப்பார்கள். ஆனால் எதிர்கால பற்றிய உரையாடல்களில் ஆர்வம் கொள்ளாமல் இருந்தாலோ அல்லது முக்கியமாக சொல்லப்போனால் திருமணம் குறித்து எந்த வித பேச்சும் அவர்களிடம் இருக்கவில்லை என்றால் அது உங்களை கழட்டி விடபோவதற்கான முக்கியமான அறிகுறியாகும்.

Tags :
|
|
|