Advertisement

  • வீடு
  • உறவுகள்
  • சகோதர அன்பை பரிமாறிக் கொள்ள...ரக்ஷாபந்தன் விழா!!

சகோதர அன்பை பரிமாறிக் கொள்ள...ரக்ஷாபந்தன் விழா!!

By: Monisha Mon, 03 Aug 2020 5:03:32 PM

சகோதர அன்பை பரிமாறிக் கொள்ள...ரக்ஷாபந்தன் விழா!!

உடன் பிறவாவிட்டாலும், சகோதர அன்பை பரிமாறிக் கொள்ள, ஆண்களின் கைகளில் ராக்கி கட்டும் ரக்ஷாபந்தன் விழாவை இன்று நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இந்தியாவில் மட்டுமின்றி, வெளிநாட்டு இந்தியர்களிடையேயும் சகோதர அன்பை பகிர்ந்துக் கொள்ள அன்பின் பிணைப்பாக கட்டப்படுவது, ராக்கி. ராக்கி கயிறுகளை ஆண்களின் கைகளில் பெண்கள் கட்டுவார்கள். இதன் மூலம் அந்த ஆண், ராக்கி கட்டிய பெண்ணுக்கு சகோதரன் முறையாகிவிடுகிறான்.

வடமாநிலங்களில் விமரிசையாக கொண்டாடப்படும் இந்த விழா, தமிழகத்திலும் சமீபக்காலமாக பிரபலமடைந்து வருகிறது. ஆவணி மாத துவக்கத்தில் வரும் பவுர்ணமி அன்று இது கொண்டாடப்படுகிறது. ரக்ஷாபந்தன் கொண்டாடப்படுவதன் பின்னணியில் ஒரு கதை சொல்லப்படுகிறது.

rakshabandhan festival,brotherly love,rocky,sister,relationship ,ரக்ஷாபந்தன் விழா,சகோதர அன்பு,ராக்கி,சகோதரி,உறவு

அதாவது, மகாபலியின் தீவிர பக்தியில் அகம் குளிர்ந்த விஷ்ணு, என்ன வரம் வேண்டும் எனக் கேட்டார். அதற்கு மகாபலி, தனது நாட்டை விஷ்ணு தான் பாதுகாக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தான். அதையேற்றுக் கொண்ட விஷ்ணு, வைகுண்டத்தில் இருந்து இறங்கி வந்துவிட்டார். கணவனை காணாத லட்சுமி, மகாபலியின் நாட்டிற்கு வந்தார். அங்கு காவலனாக இருந்த கணவனை காப்பாற்ற லட்சுமி ஏழை பெண்ணாக உருமாறினார். பின்னர் மகாபலியிடம் சென்று ஒரு கயிறை கட்டிவிட்டு, தனது நிலையை கூறியுள்ளார். இதில் மகிழ்ச்சியடைந்த மகாபலி, விஷ்ணுவை அனுப்பி வைத்தான்.

இந்த கயிறே பின்னாளில் ராக்கி கயிறாக மாறியதாக கூறப்படுகிறது. ராக்கி கட்டும் போது, சகோதரரின் சுக வாழ்விற்காக சகோதரிகள் சாமியை வேண்டுகின்றனர். அதன்பின், சகோதரர்களின் கைகளில் ராக்கி கயிறுகளை கட்டுகின்றனர். கயிறு கட்டும் போது, சகோதரிகளுக்கு அன்பின் காணிக்கையாக பணம், நகை, பரிசுப் பொருட்களை சகோதர்கள் அளிக்கின்றனர். ஜாதி,மாத, இன, மொழி என எல்லாவற்றை கடந்து, ராக்கி காட்டும் பழக்கம் சகோதர அன்பை தெரிவிப்பதன் ஒரு முக்கிய வெளிப்பாடாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

rakshabandhan festival,brotherly love,rocky,sister,relationship ,ரக்ஷாபந்தன் விழா,சகோதர அன்பு,ராக்கி,சகோதரி,உறவு

சகோதர பந்தத்தை எடுத்துக்கூறும் இந்த ரக்ஷா பந்தன் தினம் இந்துக்களின் பண்டிகை என்பதைத் தாண்டி பாசத்தைக் காட்டும் ஒரு சமூக விழாவாகவே இருந்து வருகிறது. ரக்ஷா பந்தன் என்றால் 'பாதுகாப்பு பிணைப்பு' என்றும், பாதுகாப்பு பந்தம் என்றும் பொருள். இந்த நாளில் ஓர் ஆ‌ண் தனது கையில் ரக்‌ஷா கயிறைக் கட்டிக் கொள்வது என்பது, அவருக்குக் கயிறு கட்டிய அந்தப் பெண்ணை சகோதரியாக பாவித்து அவளின் வாழ்க்கை முழுவதுமான பாதுகா‌ப்‌பி‌ற்கு‌ம், நலத்துக்கும் என்றென்றும் காவலாக இருப்பேன் என்று உறுதி கூறுவதைப் போன்றதாகும்.

இன்று ரக்ஷா பந்தனை முன்னிட்டு பல வீடுகளில் சகோதரர்களுக்கு சகோதரிகள் ஆரத்தி எடுத்து பொட்டு வைத்து ராக்கி கயிறு கட்டி வாழ்த்துக்களை பரிமாறினர். கயிறு கட்டிய சகோதரிகளுக்கு சிலர் பரிசுகளை கொடுத்து வாழ்த்தினர். திருமணம், கல்வி, வேலை காரணமாக வெவ்வேறு ஊர்களில் பிரிந்திருந்தாலும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பலரும் சந்திக்க முடியாமல் போனாலும் இந்த நாளில் சகோதர சகோதரிகளை பாசத்துடன் நினைவுகூர்ந்து மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொள்வோம்.

Tags :
|
|