Advertisement

  • வீடு
  • உறவுகள்
  • உடல் முழுவதும் ஒன்றிணைந்து செயல்படும் முத்தத்தின் பல முகங்கள்

உடல் முழுவதும் ஒன்றிணைந்து செயல்படும் முத்தத்தின் பல முகங்கள்

By: Karunakaran Wed, 23 Sept 2020 6:36:04 PM

உடல் முழுவதும் ஒன்றிணைந்து செயல்படும் முத்தத்தின் பல முகங்கள்

உதடுகளின் செயல்பாடு மட்டுமே முத்தம் அல்ல. உடல் முழுவதும் ஒன்றிணைந்து செயல்படும்போதுதான் முத்தம் முழுமையடைகிறது. முத்தத்திற்கு பல முகங்கள் இருக்கின்றன. தாய் கொடுக்கும் அன்பு முத்தத்தில்தான், ஒரு குழந்தையின் வாழ்க்கை தொடங்குகிறது. அன்பான மனைவி கொடுக்கும் கண்ணீர் கலந்த கடைசி முத்தத்தில், ஒரு ஆணின் வாழ்க்கை நிறைவடைகிறது. இந்த இரண்டு முத்தத்திற்கும் இடைப்பட்டதே மனிதன் வாழும் காலம்.

முதல் முத்தம் பெறும்போது, குழந்தைக்கு முத்தம் என்றால் என்னவென்று தெரியாது. அந்த முத்தத்தின் சுவையை தாய்தான் அனுபவிக்கிறாள். கடைசி முத்தம் பெறும்போதும், உயிரற்ற உடல் அந்த முத்தத்தின் சுவையை உணர நியாயம் இல்லை. பிறப்புக்கும், இறப்புக்கும் இடையில் இருக்கும் சத்தற்ற முத்தங்கள்தான் பெரும்பாலும் சத்தங்களை எழுப்புகின்றன. ‘‘நீங்கள் ஆன்மாவை பார்க்கவேண்டும் என்றால், காதலியின் உதடுகளை பார்த்தால் போதும்” என்று முத்தத்திற்கு முகவரி கொடுத்திருக்கிறார், ஆங்கிலேய கவிஞர் ஷெல்லி.

couple,kiss,mother,love ,ஜோடிகள், முத்தம், அம்மா, காதல்

மனிதர்களில் ஒரு ஆணும், பெண்ணும் முத்தமிடும்போது, உடலுக்கு ஏற்படும் ரசாயன மாற்றம் விவரிக்க இயலாதது. விருப்பத்தோடு முத்தமிடும்போது இருவர் உடலும் பூப்போல் மலர்கிறது. அதனால்தான் உடலில் இருக்கும் அன்பு சுரப்பிகள், முத்தங்களுக்காக ஏங்குகின்றன. முத்தம் கணவனாக இருந்து கசப்பை மறக்கவைக்கும். காதலாக இருந்து இனிக்கவைக்கும். வேதனைப்படும்போது ‘நான் இருக்கிறேன். கவலைப்படாதே’ என்று ஆறுதல் தரும். ‘விட்டுத்தொலை. அடுத்த முறை பார்த்துக்கொள்ளலாம்’ என்ற தேறுதலைத் தரும்.

உயிரை விடும் எண்ணத்தில் இருப்பவர்களைக்கூட ஒரு முத்தம் காப்பாற்றி விடக்கூடும். அதனால்தான் முத்தத்திற்கு எல்லோரும் முன்னுரிமை கொடுக்கிறார்கள். கணவருக்கு, மனைவி கன்னத்தில் முத்தம் கொடுத்தால் அது சாதாரணமானது. காதுகளில் கடித்து முத்தம் கொடுத்தால், அடுத்து தொடர வேண்டியதற்கான அழைப்பு அது. கைகளில் முத்தம் கொடுப்பது, ‘ஒருபோதும் உன்னை கைவிடமாட்டேன்’ என்று நம்பிக்கை கொடுப்பதாகும். தாம்பத்தியத்தில் முத்தம் இளங்காற்று போல் வீசுகிறது. நல்ல தாம்பத்தியத்தின் தொடக்கமாகவும் அது அமைகிறது. அன்பு மனது நிறைய இருந்து என்ன பயன்? அதை முத்தமாக கொடுக்கும்போதுதான், அன்பு நிரூபணமாகும். முத்தம் அன்பை அதி கரிப்பதோடு வலியை குறைக்கும். மனஅழுத்தத்தை மாற்றும். உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டு வரும்.

Tags :
|
|
|