Advertisement

  • வீடு
  • உறவுகள்
  • காதல் திருமணத்திற்கு பின்பு வாழ்க்கையில் ஏன் முரண்பாடு ஏற்படுகிறது ?

காதல் திருமணத்திற்கு பின்பு வாழ்க்கையில் ஏன் முரண்பாடு ஏற்படுகிறது ?

By: Karunakaran Thu, 22 Oct 2020 2:48:33 PM

காதல் திருமணத்திற்கு பின்பு வாழ்க்கையில் ஏன் முரண்பாடு ஏற்படுகிறது ?

காதலிக்கும் காலம் எல்லா நேரமும் உற்சாகம் பொங்கிக்கொண்டிருக்கும். காதலிக்கும்போது இணையை பார்த்துவிட மனது துடிக்கும். ஆனால், திருமணத்திற்கு பின்பு எல்லாம் தலைகீழாக மாறிவிடுகிறது. முன்பு நிறைகளாகத் தெரிந்தது, பின்பு குறைகளாகத் தென்படும். பார்த்துக்கொண்டே இருக்க மாட்டோமா என்ற நிலை, பார்க்காமலே இருக்கமாட்டோமா என்றாகும். இந்த தலை கீழ் மாற்றத்தை உருவாக்குவது நமது உடலில் சுரக்கும் ‘பி.இ.ஏ.’ மற்றும் ‘ஆக்சிடோசின்’ என்ற ஹார்மோன்கள். காதலிக்கும்போதும், திருமணமான புதிதிலும் அதிகமாக சுரக்கும் இவை, திருமணத்திற்குப் பிறகு குறையத் தொடங்குகிறது.

இவை குறைந்து கொண்டிருக்கும் நேரத்தில், குறைய வேண்டிய ‘செரட்டோனின்’ என்ற ஹார்மோன் அதிகமாக சுரந்து, காதலை கசக்கச் செய்ய முயற்சிக்கும். இதற்கு புதுமணத்தம்பதிகள் இடம் கொடுத்துவிடக்கூடாது. அதற்காக அவர்கள் திருமணத்திற்கு பிறகும் ஒருவரை ஒருவர் காதலிக்கவேண்டும். முன்பு போல் அதிக நேரம் பேசவேண்டும். வாழ்க்கையின் இனிமையான விஷயங்களை பேசி ஒருவரை ஒருவர் கவரவேண்டும். தினமும் இரண்டு மணிநேரத்தை கணவனும், மனைவியும் தங்களுக்காக ஒதுக்கிக்கொள்ளவேண்டும். அப்போது தங்கள் தனிமைக்குள் நுழைய டி.வி., செல்போன், உறவினர்களுக்குகூட இடம் கொடுத்துவிடக்கூடாது.

conflict,romantic marriage,love,fight ,மோதல், காதல் திருமணம், காதல், சண்டை

மண வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்கும் தம்பதிகளிடம் அன்பு அதிகமாக இருக்கவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அன்பைபோல் அதிகம் இருக்கவேண்டிய இன்னொன்று நேர்மை. அன்பு கலந்த நேர்மை இருந்தால் வாழ்க்கை அதிகம் இனிக்கும். நேர்மையை காப்பாற்ற, கணவருக்குத் தெரியாமல் மனைவியோ- மனைவிக்குத் தெரியாமல் கணவரோ எந்த ரகசியத்தையும் வைத்திருக்கக்கூடாது. ஒருவருக்குத் தெரியாமல் இன்னொருவர் எந்த காரியத்தையும் செய்யவும் கூடாது.

திருமணத்தில் கணவன், மனைவி ஆகிய இருவர் மட்டுமில்லை, இரு குடும்பங்களும் இணைகின்றன. விருந்தாளிகள் அனைவரிடமும் இனிக்க இனிக்க பேசிவிட்டு, அவர்கள் வீட்டைவிட்டு வெளியேறியதும் வாழ்க்கைத்துணையிடம் எரிந்துவிழக்கூடாது. விருந்தாளிகளிடம் நடப்பது போன்று அன்பையும், பாசத்தையும் வாழ்க்கைத்துணையிடமும் காட்டவேண்டும். பிடிக்காத காரியம் ஒன்றை செய்துவிட்டாலும் ‘நீ அப்படி செய்திருக்கக் கூடாது’ என்று கடுமைகாட்டாமல், ‘நீ இப்படி செய்திருக்கலாமே!’ என்று மென்மையாக எடுத்துச் சொல்வதே சிறந்த வழி. மென்மையாகப் பேசினால், உங்கள் வார்த்தைகளுக்கு வசிய சக்தி கிடைக்கும். இது போன்ற வார்த்தைகளை நீங்கள் எல்லா தருணங்களிலும் பிரயோகம் செய்து பாருங்கள்.

Tags :
|