Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • 6 தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்ட கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி

6 தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்ட கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி

By: Karunakaran Sun, 11 Oct 2020 4:38:03 PM

6 தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்ட கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 19-ந்தேதி தொடங்கியது. இதுவரை ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் 7 போட்களிலும் விளையாடியுள்ளன. இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்பு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மிகவும் எதிர்பார்ப்புடன் களம் இறங்கியது. முதல் போட்டியில் டெல்லிக்கு எதிராக சூப்பர் ஓவரை சென்று தோல்வியடைந்தது.

பின்னர் ஆர்சிபி அணிக்கெதிராக கேஎல் ராகுல் சதம் அடிக்க பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. அதன்பின், நடைபெற்ற ஐந்து போட்டிகளிலும் வரிசையாக தோல்வியை சந்தித்துள்ளது. நேற்று கொல்கத்தா அணிக்கெதிராக ஜெயிக்க வேண்டிய போட்டியை 2 ரன்னில் கோட்டை விட்டது. இதனால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 7 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.

kings xi punjab,knocked out,ipl series,6 defeat ,கிங்ஸ் லெவன் பஞ்சாப், நாக் அவுட், ஐபிஎல் தொடர், 6 தோல்வி

ஒவ்வொரு அணிகளும் 14 லீக் ஆட்டங்களில் 8-ல் வெற்றி பெற்றால் பிளே-ஆஃப்ஸ் சுற்றை உறுதி செய்ய முடியும். தற்போது முதல் ஏழு போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளதால், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கடைசி ஏழு போட்டிகளிலும் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதனால் பஞ்சாப் அணிக்கு ஒவ்வொரு போட்டியும் வாழ்வா? சாவா? போன்றது.

தொடக்க வீரர்களான கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளனர். பந்து வீச்சில் முகமது ஷமி 10 விக்கெட்டுகளுடன் 4-வது இடத்தில் உள்ளார. பிஷ்னோய் 8 விக்கெட் வீழ்த்தி 10-வது இடத்தில் உள்ளார். அப்படி இருந்தும் பஞ்சாப் அணியால் வெற்றி பெற முடியாதது பெரும் ஏமாற்றம்.

Tags :