Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • காயத்தில் இருந்து மீண்டு வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ள அஸ்வின், இசாந்த் சர்மா

காயத்தில் இருந்து மீண்டு வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ள அஸ்வின், இசாந்த் சர்மா

By: Karunakaran Mon, 28 Sept 2020 5:54:52 PM

காயத்தில் இருந்து மீண்டு வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ள அஸ்வின், இசாந்த் சர்மா

13-வது ஐபில் போட்டி துபாயில் தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த 19-ஆம் தேதி ஐபில் திருவிழா தொடங்கப்பட்டது. 8 அணிகள் இதில் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் இதில் வெற்றி பெற தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. 8 அணிகளும் சம பலத்துடன் உள்ளது. இந்த 8 அணிகளில் ஒன்றான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, இந்த வருடம் ஐபிஎல் சாம்பியன் கோப்பையை வென்றே தீர வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ளது.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இந்த வருடம் ஐபிஎல் சாம்பியன் கோப்பையை வென்றே தீரவீரர்களை தயார் செய்துள்ளது. இதனால் தொடக்க பேட்ஸ்மேன் வரிசையில் ரகானேவையும், சுழற்பந்து வீச்சில் அஸ்வினையும் புதிதாக அணியில் இணைத்துள்ளது.

aswin,ishant sharma,injury,delhi captitals ,அஸ்வின், இஷாந்த் சர்மா, காயம், டெல்ஹி கேப்பிட்டல்ஸ்

அணியில் ஏற்கனவே உள்ள ரபடா, நோர்ட்ஜ் ஆகியோர் வேகப்பந்து வீச்சில் அசத்தி வருகின்றனர். முதல் போட்டியில் அஸ்வின் ஒரு ஓவர் வீசிய நிலையில் காயத்தால் வெளியேறினார். இசாந்த் சர்மா போட்டி தொடங்குவதற்கு முன்பே காயத்தால் அவதிப்பட்டார். தற்போது இருவரும் உடற்தகுதி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் உடற்தகுதி பெற்ற இருவரும் நேற்று வலைப்பயிற்சி மேற்கொண்டனர். இதனால் டெல்லி அணி உற்சாகத்தில் உள்ளது. டெல்லி நாளை அபு தாபியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் இருவரும் விளையாட வாய்ப்புள்ளது.

Tags :
|
|