Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • இந்த ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி சம பலத்துடன் உள்ளது - சாஹல்

இந்த ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி சம பலத்துடன் உள்ளது - சாஹல்

By: Karunakaran Fri, 02 Oct 2020 5:45:59 PM

இந்த ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி சம பலத்துடன் உள்ளது - சாஹல்

13-வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. 8 அணிகள் இந்த போட்டியில் பங்கேற்கின்றன. 19 கடந்த ஆம் தேதி ஐபிஎல் திருவிழா தொடங்கியது. இதுவரை நடைபெற்ற ஆட்டங்களில் 8 அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளன. இதனால் அனைத்து அணிகளுமே சம பலத்துடன் உள்ளன.

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூர் அணி 3 ஆட்டத்தில் 2 வெற்றி 1 தோல்வி பெற்று 4 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. அந்த அணி நாளை ராஜஸ்தானுடன் மோதுகிறது. இந்நிலையில் பெங்களூர் அணி சம பலத்துடன் உள்ளதாக அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் தெரிவித்துள்ளார்.

bangalore team,equal strength,ipl match,sahal ,பெங்களூர் அணி, சம பலம், ஐபிஎல் போட்டி, சஹால்

இது குறித்து சாஹல் கூறுகையில், இந்த ஆண்டு நாங்கள் சீரான, சமபலத்துடனான அணியை பெற்றிருக்கிறோம். குறிப்பாக பந்துவீச்சில் சிறந்த நிலையில் இருக்கிறோம். 3 ஆட்டங்களில் 2-ல் வெற்றி பெற்று இந்த ஆண்டு நாங்கள் மிகவும் சாதகமாக இருக்கிறோம். வீராட்கோலி மற்றும் டிவில்லியர்ஸ் உள்பட அணியில் உள்ள அனைவருக்கும் வித்தியாசமான உணர்வு இருப்பதாக தெரிவித்துள்ளனர் என்று கூறினார்.

மேலும் அவர், 2016-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியின் போது இருந்த உணர்வுபோல் தற்போது இருக்கிறது. இந்த ஆண்டு சிறப்பாக தொடங்கி இருப்பது அணிக்கு புத்துணர்ச்சியை அளித்து இருக்கிறது. நான் அணியில் விளையாடுகிறேனோ இல்லையோ எனது நோக்கம். பெங்களூர் அணிக்கு கோப்பையை பெற்றுக் கொடுப்பதுதான் என்று தெரிவித்துள்ளார்.

Tags :