Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • பி.சி.சி.ஐ. வர்ணனையாளர் குழுவில் மீண்டும் சேர்க்க வேண்டும் என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கடிதம்

பி.சி.சி.ஐ. வர்ணனையாளர் குழுவில் மீண்டும் சேர்க்க வேண்டும் என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கடிதம்

By: Karunakaran Sat, 01 Aug 2020 7:08:56 PM

பி.சி.சி.ஐ. வர்ணனையாளர் குழுவில் மீண்டும் சேர்க்க வேண்டும் என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கடிதம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் சஞ்சய் மஞ்ச்ரேக்கர், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி. சி.ஐ.) டெலிவிஷன் வர்ணனையாளர் குழுவில் பல ஆண்டுகளாக இருந்து வந்தார். ஆனால் பல்வேறு சர்ச்சைகளில் அவர் சிக்கியதால், கிரிக்கெட் வாரியத்தின் வர்ணனையாளர் குழுவில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.

கடந்த மார்ச் மாதம் இந்தியா - தென் ஆப்பிரிக்கா ஒருநாள் போட்டி தொடருக்கு முன் அவர் நீக்கப்பட்டார். இந்நிலையில், ஐ.பி.எல். போட்டி செப்டம்பர் 19-ந்தேதி முதல் நவம்பர் 8-ந்தேதி அல்லது 10-ந்தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கவுள்ளது.

bcci,sanjay manjrekar,commentator group,letter ,பி.சி.சி.ஐ., சஞ்சய் மஞ்ச்ரேகர், வர்ணனையாளர் குழு, கடிதம்

தற்போது ஐ.பி.எல். போட்டி வர்ணனையாளர் குழுவில் தன்னை மீண்டும் சேர்த்துக் கொள்ளுமாறு சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், நான் பி.சி.சி.ஐ. விதிப்படி நடந்து கொள்கிறேன். இனிமேல் ஒருபோதும் விதிகளை மீற மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அதில், என்னை மீண்டும் வர்ணனையாளர் குழுவில் சேர்த்தால், மிகவும் மகிழ்ச்சி அடைவேன். தங்களின் பதிலுக்கு காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார். இந்த கடிதம் குறித்து விரைவில் கங்குலி முடிவு எடுப்பார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Tags :
|