Advertisement

சூர்யகுமார் தேர்வாகாதது குறித்து பிரையன் லாரா வருத்தம்

By: Nagaraj Tue, 24 Nov 2020 09:46:51 AM

சூர்யகுமார் தேர்வாகாதது குறித்து பிரையன் லாரா வருத்தம்

ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் சூர்யகுமார் இடம் பெற்று இருக்க வேண்டும். அவர் ஏன் தேர்வாகவில்லை என்பது எனக்கு தெரியவில்லை என லாரா தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தலா 3 ஒருநாள், டி20 மற்றும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. இந்த தொடருக்கான் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்த அணியில் பெரும்பாலும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆனால் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக சிறப்பாக விளையாடிய சூர்யகுமார் யாதவுக்கு அணியில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு இந்த முறையும் ஏமாற்றமே மிஞ்சியது.

not selected,suryakumar,indian team,laura,australia ,தேர்வாகவில்லை, சூர்யகுமார், இந்திய அணி, லாரா, ஆஸ்திரேலியா

இந்திய அணியில் இடம் கிடைக்காதது ஏமாற்றம் தான் என சூர்யகுமார் எனது வருத்தத்தை வெளியப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான், பிரையன் லாரா தெரிவித்துள்ளதாவது:

சூர்யகுமார் யாதவ் தரமான வீரர். அவர்களது ஆட்ட நுணுக்கம், நெருக்கடியான தருணத்தை கையாளும் விதம், எந்த நிலையில் விளையாடுகிறார் என்பதை வைத்து தான் சொல்கிறேன். சூர்யகுமார் யாதவ் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அருமையான ஆட்டத்தை அளித்தார்.

தொடக்க ஆட்டக்காரர்களை தவிர்த்து விட்டு பார்த்தால் எந்தவொரு அணியிலும் 3-வது வீரராக களம் இறங்குபவர் தான் சிறந்த வீரராக வும், அதிக நம்பிக்கைக்குரிய வீரராகவும் இருப்பார். என்னை பொறுத்தமட்டில் அவர் மும்பை அணிக்கு அது போன்ற சிறந்த வீரராக தான் இருந்து இருக்கிறார். ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியை பார்க்கையில் அவர் அதில் இடம் பெற்று இருக்க வேண்டும். அவர் ஏன் தேர்வாகவில்லை என்பது எனக்கு தெரியவில்லை' என்று தெரிவித்தார்.

Tags :
|